சேடபட்டி இரா. முத்தையா
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
சேடபட்டி இரா. முத்தையா (Sedapatti R. Muthiah)(4 அக்டோபர் 1945 – 21 செப்டம்பர் 2022) தி.மு.கவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் 1991 முதல் 1996 வரை சட்டப்பேரவைத் தலைவராக இருந்தவர்.[2][3]. 2000 வரை அதிமுகவில் அதன் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு நெருக்கமாக இருந்தவர். சேடப்பட்டி சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தமிழகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் "சேடபட்டியார்" என்று அழைக்கப்பட்டார். அதிமுக சார்பில் இந்திய நாடாளுமன்றத்திற்கு பெரியகுளம் தொகுதியிலிருந்து இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். அடல் பிகாரி வாச்பாய் தலைமையேற்ற நடுவண் அமைச்சரவையில் தரைவழிப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
விரைவான உண்மைகள் சேடபட்டி இரா. முத்தையா, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் ...
சேடபட்டி இரா. முத்தையா | |
---|---|
முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் | |
பதவியில் 1991–1996 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அக்டோபர் 3, 1945 முத்தப்பன்பட்டி, தே. கல்லுப்பட்டி |
இறப்பு | செப்டம்பர் 21 , 2022[1] சென்னை |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
பிற அரசியல் தொடர்புகள் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2000 வரை) |
துணைவர் | சகுந்தலா |
தொழில் | அரசியல்வாதி |
மூடு