ஜான் போஸ்கோ
இத்தாலிய உரோமன் கத்தோலிக்க பாதிரியார், கல்வியாளர், எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
ஜான் போஸ்கோ (இத்தாலியம்: Giovanni Melchiorre Bosco (இயற்பெயர்); 16 ஆகத்து 1815[1] – 31 சனவரி 1888 ), ஓர் இத்தாலிய உரோமன் கத்தோலிக்கக் குருவும், கல்வியாளரும், 19ஆம் நூற்றாண்டின் எழுத்தாளரும் ஆவார். இவர் தன் வாழ்நாளெல்லாம் ஏழை எளியவர்களின் பிள்ளைகளுக்கும், தெருவில் அலைந்து திரிந்த இளையோரின் முன்னேற்றத்திற்கும் உழைத்தார். இவர் இத்தகையோரின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். தண்டனை சார்ந்த கல்வி முறையை விடுத்து அன்பு சார்ந்த கல்வி முறையைப் பின்பற்றினார்.[2]
விரைவான உண்மைகள் புனித ஜான் போஸ்கோ, குரு; ஆதீனத்தலைவர்; இளையோரின் தந்தை மற்றும் ஆசிரியர் ...
புனித ஜான் போஸ்கோ | |
---|---|
குரு; ஆதீனத்தலைவர்; இளையோரின் தந்தை மற்றும் ஆசிரியர் | |
பிறப்பு | (1815-08-16)16 ஆகத்து 1815 காசல்நுவோ தே ஆஸ்தி, பியத்மாந்து, இத்தாலி |
இறப்பு | 31 சனவரி 1888(1888-01-31) (அகவை 72) |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்க ஒன்றியம் |
அருளாளர் பட்டம் | 2 ஜூன் 1929, உரோமை by பதினொன்றாம் பயஸ் |
புனிதர் பட்டம் | 1 ஏப்ரல் 1934, உரோமை by பதினொன்றாம் பயஸ் |
முக்கிய திருத்தலங்கள் | கிறித்தவர்களின் சகாய அன்னை பேராலயம், துரின், இத்தாலி |
திருவிழா | 31 சனவரி |
பாதுகாவல் | கிறித்தவர்கள், வேலை பழகுபவர், பதிப்பாசிரியர்கள், பதிப்பாளர்கள், பள்ளி சிறார்கள், இளையோர், கண்கட்டி வித்தை புரிவோர் |
மூடு