சுபாஷ் சந்திர போஸ்
இந்திய தேசியவாத தலைவர் மற்றும் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1] இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.[5]
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் | |
---|---|
பிறப்பு | (1897-01-23)23 சனவரி 1897 கட்டக், வங்காள மாகாணம், கட்டக் மாவட்டம் தற்பொழுது ஒடிட்சாவில் |
இறப்பு | இறந்ததாகக் கருதப்படும் நாள் 18 ஆகத்து 1945(1945-08-18) (அகவை 48)[1] ஹோ சி மின் நகரம், வியட்நாம் |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | நேதாஜி |
படித்த கல்வி நிறுவனங்கள் | கல்கத்தா பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு, இரண்டாம் உலகப் போரின் போது இந்தியத் தேசிய இராணுவத்தை உருவாக்கியமை. |
பட்டம் | அசாத் இந்து தலைவர் இந்தியத் தேசிய இராணுவத்தின் சம்பிரதாயத் தலைவர் |
அரசியல் கட்சி | இந்திய தேசியக் காங்கிரசு, பார்வார்டு பிளாக்கு |
சமயம் | இந்து |
பெற்றோர் | ஜானகிநாத் போசு பிரபாவதி தேவி |
வாழ்க்கைத் துணை | எமிலி செங்கல்[2] |
பிள்ளைகள் | அனிதா போஸ்[3] |
இவர் 1945 ஆகத்து 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், அல்லது உருசியாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985 இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆகத்து 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது, போஸ் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்த முகர்ஜி கமிஷன், நேதாஜி அவ்விமான விபத்தில் இறக்கவில்லை எனத் தெரிவித்து விட்டது.[6]