கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம் ஆகும். இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளியுள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற சாரங்கபாணி கோயில் | |
---|---|
![]() பெருமாள் கோபுரம் | |
சாரங்கபாணி கோயில், கும்பகோணம், தமிழ்நாடு | |
புவியியல் ஆள்கூற்று: | 10.9595°N 79.3753°E / 10.9595; 79.3753 |
பெயர் | |
பெயர்: | சாரங்கபாணி கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | கும்பகோணம் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | ![]() |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆராவமுதன் |
தாயார்: | கோமலவல்லி |
தல விருட்சம்: | புன்னை மரம் |
தீர்த்தம்: | மகாமக குளம், காவிரி தீர்த்தம் |
ஆகமம்: | பாஞ்சராத்திரம் |
சிறப்பு திருவிழாக்கள்: | வைகுண்ட ஏகாதேசி, பிரம்மோட்சவம் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிர திவ்வியப் பிரபந்தம் |
மங்களாசாசனம் செய்தவர்கள்: | பெரியாழ்வார் ஆண்டாள் குலசேகர ஆழ்வார் திருமழிசையாழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார் திருப்பாணாழ்வார் திருமங்கையாழ்வார் பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் (ஆழ்வார்) |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | தென்னிந்திய கட்டிடக்கலை [1] |
கோயில்களின் எண்ணிக்கை: | ஒன்று |
வரலாறு | |
அமைத்தவர்: | பிற்கால சோழர்கள் விஜயநகர மன்னர்கள் தஞ்சை நாயக்க மன்னர்கள் |
கும்பகோணத்திலுள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சார்ங்கபாணி கோவிலாகும். இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பைக் கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும். சோழர்களால் கட்டப்பட்டது.தஞ்சை நாயக்க மன்னர்களால் இக்கோவின் கலைநயம் மிகுந்த சிற்பங்கள் தூண்கள் கொண்ட மண்டபங்கள் இராஜ கோபுரங்கள் கட்டப்பட்டவையாகும்.