![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0c/Periazhwar.jpg/640px-Periazhwar.jpg&w=640&q=50)
பெரியாழ்வார்
பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் மற்றும் ஆண்டாளின் தந்தை / From Wikipedia, the free encyclopedia
பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.[1][2] திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர். திருவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களைப் பறித்துப் பூமாலையாகச் சாற்றுவதைக் கைங்கர்யமாகக் கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின் வளர்ப்பு தந்தையானவர். ஆண்டாளைத் திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார்.
விரைவான உண்மைகள் பெரியாழ்வார், பிறப்பு ...
பெரியாழ்வார் | |
---|---|
![]() | |
பிறப்பு | பொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் திருவில்லிபுத்தூர், தமிழ்நாடு |
இயற்பெயர் | விஷ்ணு சித்தர் |
குரு | சேனை முதலியார் |
இலக்கிய பணிகள் | திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி |
மூடு