குகில வம்சம்
இராஜஸ்தானை ஆண்ட பண்டைய வம்சம் / From Wikipedia, the free encyclopedia
மேவாரின் குகிலர்கள் (Guhila dynasty) மேவாரின் குகிலர்கள் என்றும் பேச்சுவழக்கில் அழைக்கப்படும் மெடபட்டாவின் குகிலர்கள் இந்தியாவின் இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மெடபட்டா (நவீன மேவார் ) பகுதியை ஆண்ட ராஜபுத்திர வம்சத்தினராவர்.[1] [2] குகில மன்னர்கள் ஆரம்பத்தில் 8 - 9 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கூர்ஜர-பிரதிகாரப் பேரரசின் கீழ் நிலப்பிரபுக்களாக ஆட்சி செய்தனர். பின்னர் 10ஆம் நூற்றாண்டில் சில காலத்திற்கு இராஷ்டிரகூட ஆட்சியாளர்களாக இருந்தனர்.[3] இவர்களின் தலைநகரங்களில் நகராடா (நக்டா), அகதா (அகர்) ஆகியவை அடங்கும். இந்த காரணத்திற்காக, அவை குகிலாக்களின் நக்டா-அகர் கிளை என்றும் அழைக்கப்படுகின்றன.
குகில வம்சம் | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பொ.ச.728–1303 | |||||||||||
தலைநகரம் | |||||||||||
சமயம் | இந்து சமயம் | ||||||||||
• பொ.ச.728-753 | பப்பா ராவல் (முதல்) | ||||||||||
• பொ.ச.1302-1303 | இரத்னசிம்மன் (கடைசி) | ||||||||||
வரலாறு | |||||||||||
• தொடக்கம் | 728 | ||||||||||
1303 | |||||||||||
|
11 ஆம் நூற்றாண்டில் கூர்ஜர-பிரதிகாரர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு குகிலர்கள் தனித்து ஆட்சி புரிந்தனர். 11-13 ஆம் நூற்றாண்டுகளில், இவர்கள் பரமாரர்கள், சௌகான்கள், தில்லி சுல்தான்கள், சோலங்கியர்கள், வகேலாக்கள் உட்பட பல அண்டை நாடுகளுடன் இராணுவ மோதல்களில் ஈடுபட்டனர். 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பரமார மன்னன் போஜன் குகில சிம்மாசனத்தில் குறுக்கிட்டு, அபோதிருந்த ஒரு ஆட்சியாளரை அகற்றி, கிளையின் வேறு ஒரு ஆட்சியாளரை நியமித்ததாகத் தெரிகிறது.[4]
12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், வம்சம் இரண்டு கிளைகளாகப் பிரிக்கப்பட்டது. மூத்த கிளை (பின்னர் இடைக்கால இலக்கியங்களில் ராவல் என்று அழைக்கப்பட்டது) சித்ரகூடத்தில் இருந்து (நவீன சித்தோர்கார் ) ஆட்சி செய்தனர். மேலும் 1303 ஆம் ஆண்டு தில்லி சுல்தானகத்திற்கு எதிராக இரத்னசிம்மனின் தோல்வியுடன் வம்சம் முடிவுக்கு வந்தது. மற்றொரு கிளை ராணா என்ற பட்டத்துடன் சிசோதியாவிலிருந்து ஆட்சி செய்து, சிசோதிய இராஜபுத்திர வம்சத்தை உருவாக்கியது.