கீர்த்திப்பூர் போர்
From Wikipedia, the free encyclopedia
கீர்த்திபூர் போர் (Battle of Kirtipur) நேபாளத்தை கோர்க்கள் கைப்பற்றிய போது நிகழ்ந்த ஒரு போர் ஆகும். காத்மாண்டு சமவெளியின் ஒரு முதன்மை நகரமான கீர்த்திப்பூரில் இப்போர் 1767 ஆம் ஆண்டு நடைபெற்றது. கீர்த்திப்பூர் அப்போது லலித்பூர், நேவார் இராச்சியத்தின் ஒரு அங்கமாக இருந்தது. மதில்சுவரால் சூழப்பட்ட 800 வீடுகள் கொண்ட ஒரு நகரமாக உயர்ந்த மேல்பகுதியில் விரிந்திருந்தது[1]
கீர்த்திப்பூர் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
கோர்க்காலிகள் நேப்பாளத்தைக் கைப்பற்றுதல் பகுதி | |||||||
கீர்த்திப்பூர் போரில் பாக் பைரவா கோயில் மீதுள்ள ஆயுதங்கள் |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
நேவார்கள் | கோர்க்கர்கள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
தனுவந்தர் | கலு பாண்டே சுருபரட்னா |
||||||
பலம் | |||||||
தெரியவில்லை | தெரியவில்லை |
காத்மாண்டு சமவெளியின் நேவார் படைகளுக்கும், முற்றுகையிட்டிருந்த கோர்க்கா படையினரருக்கும் இடையில் இப்போர் நடைபெற்றது. நாடு பிடிக்கும் ஆசையில் ஷா வம்சத்தை நிறுவிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா தொடங்கிய போரில் கீர்த்திப்பூர் போர் ஒரு திருப்பு முனையாக அமைந்தது என்று கோர்க்காலிகள் குறிப்பிட்டனர். நேவார்களின் ஆட்சி முடிவுக்கு வருவதற்கும், [2][3] காட்மாண்டு பள்ளத்தாக்கும் அதனுடன் இணைந்த பிற பகுதிகள் முழுவதும் பிரிதிவி நாராயணன் ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வருவதற்கும் இப்போரில் அடைந்த வெற்றி ஒரு முக்கிய காரணமாகும்.[4]