![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/M._M._Keeravani_at_Inji_Iduppazhagi_Audio_Launch.jpg/640px-M._M._Keeravani_at_Inji_Iduppazhagi_Audio_Launch.jpg&w=640&q=50)
கீரவாணி (இசையமைப்பாளர்)
From Wikipedia, the free encyclopedia
கொடுரி மரகதமணி கீரவாணி, (M. M. Keeravani) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் எம். எம். கீரவாணி என்று பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னட, மலையாள மற்றும் இந்தி திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
எம். எம். கீரவாணி | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | கொடுரி மரகதமணி கீரவாணி |
பிற பெயர்கள் | மரகதமணி (கோலிவுட்) எம். எம். கீரம் (பாலிவுட்) |
பிறப்பு | 4 சூலை 1961 (1961-07-04) (அகவை 62) கொவ்வூர், ஆந்திர பிரதேஷ், இந்தியா |
பிறப்பிடம் | ஆந்திர பிரதேஷ், இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்பட இசை, உலக இசை |
தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் |
இசைத்துறையில் | 1989–தற்போது |
இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் பின்னணிப் பாடகர்களான எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சித்ரா ஆகியோரால் பாடப்பெற்றது.[1] 1997இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அன்னமாச்சாரியார் திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள், ஆந்திர அரசாங்கம் தருகின்ற நந்தி விருது போன்றவற்றை பெற்றுள்ளார்.[2] இவரது இசையமைப்பில் வெளிவந்த இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர். ஆர். ஆர்.) திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது மற்றும் அகாதமி விருதினை வென்றது.[3][4]
இவர் தமிழ்த் திரைப்படங்களில் மரகதமணி என்று அழைக்கப்பட்டார்.