![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/Kiran_Bedi%252C_Lec_Dems.jpg/640px-Kiran_Bedi%252C_Lec_Dems.jpg&w=640&q=50)
கிரண் பேடி
இந்திய அரசியல்வாதி, சமூக செயற்பாட்டாளர் மற்றும் காவல்துறை அதிகாரி. / From Wikipedia, the free encyclopedia
கிரண் பேடி (ஆங்கில மொழி: Kiran Bedi, பிறப்பு: 9 சூன் 1949) ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972 ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார்.[2] இவர் தில்லி, கோவா மற்றும் மிசோரம் ஆகிய இடங்களில் பணியாற்றி உள்ளார். 1971 ஆம் ஆண்டில் ஆசிய பெண்கள் டென்னிசு போட்டியில் வெற்றி பெற்றார். 1993 இல் இவர் தில்லி சிறைச்சாலைகளுக்கு பொது ஆய்வாளராக இருந்தபோது திகார் சிறைகளில் இவராற்றிய சீர்திருத்தங்கள் பலரின் பாராட்டைப் பெற்றதோடு[3] 1994 ஆம் ஆண்டிற்கான ரமோன் மக்சேசே விருது விருது பெற ஏதுவாய் இருந்தது. 2007 ஆம் ஆண்டு இவர் விருப்பப்பணி ஓய்வு பெற்றார்.[4] 2011 இல் நடந்த இந்திய லஞ்ச ஒழிப்பு இயக்கத்தில் இவர் குறிக்கத்தக்க பங்கு வகித்தார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் ஜனவரி 2015 இல் இணைந்தார்.
கிரண் பேடி | |
---|---|
ਕਿਰਨ ਬੇਦੀ | |
![]() கிரண் பேடி, இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை, 2014 | |
24வது புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் | |
பதவியில் 29 மே 2016[1] – 16 பெப்ரவரி 2021 | |
முன்னையவர் | ஏ. கே. சிங் |
பின்னவர் | தமிழிசை சௌந்தரராஜன் |
காவல்துறையின் தலைமை இயக்குனர் ![]() | |
பதவியில் 1972 - 2007 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கிரண் பெசவாரியா 9 சூன் 1949 (1949-06-09) (அகவை 75) அம்ரித்சர், பஞ்சாப் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பிரிஜ் பேடி(1972-தற்போது வரை) |
பிள்ளைகள் | சாயினா |
பெற்றோர் | பிரகாஷ் லால், பிரேமலதா |
வாழிடம்(s) | புதுச்சேரி, இந்தியா |
கல்வி | இளங்கலை ஆங்கிலம், 1968 முதுகலை அரசியல், 1970 இளங்கலை சட்டம் 1988 முனைவர் 1993 |
முன்னாள் கல்லூரி | பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர் தில்லி பல்கலைக்கழகம் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லி |
வேலை | புதுச்சேரி மாநில லெப்டினென்ட் ஆளுநர், அரசியல்வாதி, சமூக சேவகி, ஓய்வு பெற்ற காவல் அதிகாரி. |
விருதுகள் | United Nations Medal, 2004 ரமோன் மக்சேசே விருது, 1994 President's Police Medal, 1979 |
இணையத்தளம் | kiranbedi |
2016 ஆம் ஆண்டு மே 29இல் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்று, 16 பெப்ரவரி 2021 ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார்.[5][6]