பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை இந்தியாவில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தைப் பற்றியது. பாக்கித்தானில் உள்ள இதே பெயருள்ள பல்கலைக்கழகத்திற்கு, பஞ்சாப் பல்கலைக்கழகம் என்பதைப் பாருங்கள்.
பஞ்சாப் பல்கலைக்கழகம் ( Panjab University) இந்தியாவில் நிறுவப்பட்ட தொன்மையான பல்கலைக் கழகங்களில் ஒன்றாகும். இது பிரித்தானிய இந்தியாவில் தற்போதைய பாக்கித்தானில் உள்ள பஞ்சாபில் லாகூர் நகரில் 1882ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தற்போதைய வளாகம் 1956ஆம் ஆண்டில் கட்டமைக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...
குறிக்கோளுரை | சமக்கிருதம்: तमसो मा ज्योतिर्गमय |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | இருளிலிருந்து ஒளிக்கு வழிகாட்டுக ! |
வகை | பொது |
உருவாக்கம் | 1882, சண்டிகருக்கு மீளமைப்பு 1956 |
வேந்தர் | முகம்மது அமீத் அன்சாரி, இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் |
துணை வேந்தர் | ஆர். சி. சோப்டி |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்புறம் |
சுருக்கப் பெயர் | PU |
சேர்ப்பு | UGC |
இணையதளம் | www.puchd.ac.in |
மூடு
சண்டிகர் நகரின் செக்டர்கள் 14 மற்றும் 25இல் 550 ஏக்கர்கள் (2.2 km2) பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகம் தங்கிப் படிக்கும் வளாகமாகும். நிர்வாகத்தின் கட்டிடங்களும் கல்வித்துறைகளும் செக்டர் 14இல் அமைந்துள்ளன. பல்கலைக்கழகத்தில் 58 கற்பிக்கும் மற்றும் ஆய்வுத் துறைகள் உள்ளன. இதன் கீழ் பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகரில் உள்ள 172 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. தவிர முக்த்சர், லூதியானா,ஹோசியார்பூர் நகரங்களில் பிராந்திய மையங்கள் இயங்குகின்றன.