![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Asia_1200ad.jpg/640px-Asia_1200ad.jpg&w=640&q=50)
காலச்சூரி பேரரசு
From Wikipedia, the free encyclopedia
காலச்சூரி பேரரசு (Kalachuri Empire) (ஆட்சி காலம்; கி பி 1130–1184) மத்திய இந்தியாவின் விந்திய மலைக்கு வடக்கேயும், விந்திய மலைக்கு தெற்கேயும் இரண்டு பேரரசுகளாக 11ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு முடிய ஆட்சி செய்தன.
அலுவல் மொழிகள் | வடக்கில்: சமசுகிருதம் தெற்கில்: கன்னடம் |
தலைநகரங்கள் | பேரரசின் வடக்கில்: திருபுரி பேரரசின் தெற்கில்: பசவகல்யாண் |
அரசாட்சி முறை | முடியாட்சி |
சமயங்கள் | இந்து சமயம் பௌத்தம் சமணம் |
முன்னிருந்த அரசு | மேலைச் சாளுக்கியர் |
பின் வந்த அரசு | யாதவப் பேரரசு போசளப் பேரரசு |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/16/Asia_1200ad.jpg/640px-Asia_1200ad.jpg)
இந்தியாவின் ஜபல்பூர் அருகே உள்ள திருபுரி (திவார்) நகரை தலைநகராகக் கொண்டு, தற்கால மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், பகுதிகளை ஆண்ட வடக்கு காலச்சூரி பேரரசின் ஆட்சியாளர்களை, சேதி நாட்டவர் அல்லது [[ஹேஹேயர்கள் (இராஜபுத்திர குலம்) என்றழைப்பர். இப்பேரரசு எட்டாம் நூற்றாண்டில் துவங்கி, படிப்படியாக வளர்ந்து 12 முதல் 13வது நூற்றாண்டு காலத்தில் வீழ்ச்சியடையத் துவங்கியது.[1] விந்திய மலைக்கு தெற்கே தற்கால கன்னடப் பகுதிகளை ஆட்சி செய்த காலச்சூரி பேரரசர்களை ஆரியரல்லாத திரிகூட வம்சத்தவர் எனப்பட்டனர்.[2] துவக்ககால காலச்சூரி அரசர்கள், நர்மதை சமவெளியில் அமைந்திருந்த மகிழ்மதி நகரத்தை தலைநகராகக் கொண்டு, கி. பி 550 - 620 முடிய தற்கால மகாராஷ்டிரம் மாலவம் மற்றும் மேற்கு தக்கானப் பகுதிகளை ஆண்டனர். துவக்க கால தெற்கு காலச்சூரி அரசர்களில் புகழ் பெற்றவர்கள் கிருஷ்ணராஜன், சங்கரகனன், புத்தராஜன் ஆவர்.[3] காலச்சூரிகள் இந்துசமயத்தை குறிப்பாக பாசுபதத்தை பின்பற்றினர்.[4]
தெற்கு காலச்சூரிப் பேரரசு 1130 - 1184 முடிய தற்கால கருநாடக மாநிலத்தின் வடக்குப் பகுதிகளையும், மகாராஷ்டிர மாநிலத்தின் சில பகுதிகளையும் ஆண்டது. தெற்கு காலச்சூரிகள் தக்காணத்தில் 1156 - 1184 கால கட்டத்தில் தங்கள் பேரரசை நிலைநாட்டியது.