![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/07/A_view_of_Nataraja_Shiva_Temple_at_Chidambaram%252C_Tamil_Nadu.jpg/640px-A_view_of_Nataraja_Shiva_Temple_at_Chidambaram%252C_Tamil_Nadu.jpg&w=640&q=50)
கடலூர் மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய கடலூர் கட்டுரையைப் பார்க்க.
கடலூர் மாவட்டம் (Cuddalore district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கடலூர் ஆகும். இந்த மாவட்டம் 3,703 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் கடலூர் மாவட்டம், நாடு ...
கடலூர் மாவட்டம் | |
---|---|
Top: சிதம்பரம் நடராசர் கோயில், கடலூர் படகுகள் Mid: கணபதிக்குறிச்சியில் உள்ள வயல்வெளிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் வாயில் Bottom: பிச்சாவரம் சதுப்புநில காடுகள் | |
![]() Location in Tamil Nadu | |
ஆள்கூறுகள்: 11°45′0″N 79°45′0″E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தலைமையகம் | கடலூர் |
தாலுகாக்கள் | புவனகிரி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், விருத்தாசலம் |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | திரு. அ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப[1] |
• காவல் கண்காணிப்பாளர் | எஸ்.சக்தி கணேசன்,[2] ஐ.பி.எஸ் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 26,05,914 |
• அடர்த்தி | 702/km2 (1,820/sq mi) |
மொழிகள் | |
• அரசு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
பின்கோடு | 607xxx |
தொலைபேசி குறியீடு | 91 04142 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | TN-31,TN-91[3] |
பெரிய நகரம் | கடலூர் |
அருகில் உள்ள நகரம் | பாண்டிச்சேரி, சென்னை |
பாலின விகிதம் | 984 ♂/♀ |
எழுத்தறிவு | 79.04% |
சட்டமன்ற வகை | தேர்ந்தெடு |
மாநிலச் சட்டப் பேரவை | கடலூர் |
சராசரி வெப்பநிலை | 41 °C (106 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 20 °C (68 °F) |
இணையதளம் | cuddalore |
மூடு
சோழர் கால வரலாற்றுப் புதினத்தின் (பொன்னியின்செல்வன்) படி அக்காலத்தில் இவ்வூரின் பெயர் கடம்பூர் என்று அழைக்கப்பட்டது. அந்த பெயரே கடலூர் என ஆகியிருக்கலாம் என கருதப்படுகிறது. இம்மாவட்டத்திற்கு திருப்பாதிரிப்புலியூர் என்ற பெயரும் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்த பெயரை உச்சரிக்க அவர்களுக்கு கடினமாக இருந்ததால் இவ்வூருக்கு 'கடலூர்' என பெயரிட்டனர்.