க. பொன்முடி
தமிழ்நாட்டு அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
க. பொன்முடி எனும் கந்தசாமி தெய்வசிகாமணி ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக அமைச்சரவையின் தற்போதைய உயர் கல்வி அமைச்சர் ஆவார். இவர் தனது ஆரம்ப காலத்தில் அரசு கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் காலகட்டத்திலேயே திராவிடர் கழகம் பெரியார் கொள்கையில் பற்றுக் கொண்டார். பின்னாளில் அரசியல் களபணியாற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1984ல் அன்றைய தலைவர் கருணாநிதி முன்னிலையில் இணைந்தார். பிறகு 1989 சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் கருணாநிதி அவர்கள் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த போது பொன்முடி முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று அந்த ஆட்சி காலத்திலேயே அமைச்சராகவே பொறுப்பேற்று கொண்டார். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வரும் காலத்திலும் தனக்கு தரப்பட்ட இலாக்காவில் மந்திரியாக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டுள்ளார். இவர் தற்போது ஒருகிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் திமுகவின் மாவட்ட செயலாளர் பதவியிலும், கூடுதலாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் உள்ளார்.
க. பொன்முடி | |
---|---|
உயர் கல்வி அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 7 மே 2021 – 21 டிசம்பர் 2023 | |
உயர் கல்வி அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 13 மே 2006 – 15 மே 2011 | |
போக்குவரத்து அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 13 மே 1996 – 13 மே 2001 | |
சுகாதாரத்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தெய்வசிகாமணி ஆகத்து 19, 1950 (1950-08-19) (அகவை 73) டி. எடையார், திருக்கோயிலூர், விழுப்புரம், தமிழ்நாடு |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திமுக |
துணைவர் | விசாலாட்சி பொன்முடி |
பிள்ளைகள் |
|
பெற்றோர் | தந்தை : கந்தசாமி உடையார் தாயார் : மரகதம் அம்மாள் |
கல்வி | கல்வி வரலாற்றில் முனைவர் பட்டம் |
வேலை |
|
தமிழ்நாடு மாநிலம், விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் டி.எடையார் கிராமத்தில் துளுவ வேளாளர்[1] குடும்பத்தில் ஆகத்து 19, 1950 ஆம் ஆண்டு பிறந்தார். வரலாறு, அரசியல் மற்றும் பொதுத்துறை நிர்வாகம் ஆகிய துறையில் முதுநிலைப் பட்டமும், வரலாற்றில் முனைவர் பட்டமும் பெற்ற இவர் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். பொன்முடி 1989 ஆண்டு முதல் தி.மு.க.வில் முக்கியப் பதவிகளில் உள்ளார். தி மு க வினரால் இனமான இளய பேராசிரியர் என்று அழைக்கப்படுகிறார் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு திருக்கோயிலூர் சட்டமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்இதே திருக்கோவிலூர் தொகுதியில் மீண்டும் வென்று ஆறாவது முறையாக ஆட்சியமைக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைச்சரவையில் 2021 மே 7 அன்று உயர்கல்வித்துறை அமைச்சராகப் பதவி ஏற்றார். இந்த அமைச்சரவையில் துணை முதல்வராக பதவி ஏற்றுக் கொள்வார் என்று தமிழக முழுவதும் பரவலாக பேசப்பட்டது .[4]