ஐதர் அலி
From Wikipedia, the free encyclopedia
ஐதர் அலி (Hyder Ali, உருது: سلطان حيدر علی خان , கன்னடம்: ಹೈದರಾಲಿ, ஹைதர் அலி, (பிறப்பு: 7-12-1720) (இறப்பு: 7 திசம்பர் 1782), இசுலாமிய நாட்காட்டியில் 2 முகரம் 1197) மைசூரைத் தலைநகராகக் கொண்டு மைசூர் அரசை 1760களில் இருந்து 1782 வரை ஆண்டார். ஐதர் என்றால் சிங்கம் என்று பொருள். சாதாரண குதிரைப்படை போர்வீரராக இருந்து ஒரு அரசை ஆளும் மன்னராக உயர்ந்தவர். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டவர். இவரது மகனே திப்புசுல்தான்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள் ஐதர் அலி, ஆட்சி ...
ஐதர் அலி | |
---|---|
மைசூர் அரசர் | |
வில்லியம் டிக்சு வரைந்த அயிதர் அலியின் உருவப்படம், 1846 | |
ஆட்சி | 1761–1782 |
முன்னிருந்தவர் | இரண்டாம் கிருட்டிணராச உடையார் |
திப்பு சுல்தான் | |
மரபு | மைசூர் சுல்தானகம் |
தந்தை | பஃதே முகம்மது |
பிறப்பு | 1720 கோலார் இன்றைய கர்நாடகம் |
இறப்பு | (1782-12-07)7 திசம்பர் 1782[1] (வயது: 60–61) சித்தூர் |
அடக்கம் | ஸ்ரீரங்கப்பட்டணம் |
சமயம் | இசுலாம் |
மூடு