ஊர்மிளா மடோண்த்கர்
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
ஊர்மிளா மதோண்ட்கர் (Urmila Matondkar; மராத்தி: उर्मिला मातोंडकर) (இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை நகரில் 1974 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதியன்று பிறந்த ஓர் இந்திய பாலிவுட் நடிகை ஆவார்.
ஊர்மிளா மதோண்ட்கர் | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 4, 1974 (1974-02-04) (அகவை 50) மும்பை, இந்தியா |
தொழில் | நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனர் |
நடிப்புக் காலம் | 1980–1991 - இன்று வரை |
மதோண்ட்கர் ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தமது திரை வாழ்க்கையை 1977 ஆம் ஆண்டு கர்ர்ம் எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். வயது வந்தவராக நரசிம்மா எனும் திரைப்படத்திலும் அறிமுகமானார். அவர் ரங்கீலா (1995), ஜுதாயி மற்றும் சத்யா (1998) ஆகிய திரைப்படங்களில் ஏற்ற வேடங்களின் மூலம் வணிக ரீதியான ஹிந்தித் திரைப்பட உலகின் பிரபல நடிகையாகத் தம்மை நிலை நாட்டிக்கொண்டார். இவை அனைத்துமே அவருக்கு பிலிம்பேர் விருது பரிந்துரைப்பைப் பெற்றுத் தந்தன. தீவிரமான நாகரிகப் பாணி மற்றும் நடனத் திறமை ஆகியவற்றிற்காக பெரும் அளவில் அறியப்பட்ட இவர், பல நேரங்களில் "பாலியல் குறியீடு" என்றே இந்திய ஊடகங்களில் சித்தரிக்கப்பட்ட சந்தர்ப்பங்களும் உள.[1][2][3][4]
இதைத் தொடர்ந்து உளரீதியான பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து அவர் விமர்சன ரீதியாக பாராட்டுப் பெற்ற நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இவற்றில், ஒரு மன நோயாளியாக அவர் நடித்த கோன் (1999), தவிர்க்க முடியாத காதல் வெறி கொண்டவராக நடித்த பியார் துனே கியா கியா (2001), ஆவியால் பீடிக்கப்பட்ட பெண்ணாக நடித்த பூத் மற்றும் இரக்கமில்லாத பழிவாங்குபவராக நடித்த ஏக் ஹசினா தி (2004) ஆகியவை அடங்கும். பூத் திரைப்படத்தில் தமது நடிப்புக்காக அவர் "சிறந்த செயல்திறனாளர்" என்னும் பிரிவில் தமது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றார்; மேலும் பல விருது நிகழ்ச்சிகளிலும் சிறந்த நடிகை என்பதற்கான விருதுகளைப் பெற்றார். இதைத் தொடர்ந்து அவர் கலைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட திரைப்படங்களான தேஜீப் (2003), பிஞ்சர் (2003) மைனே காந்தி கோ மாரா (2005) மற்றும் பஸ் ஏக் பல் (2006) ஆகியவற்றிலும் நடித்தார்.