![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Galileo_before_the_Holy_Office.jpg/640px-Galileo_before_the_Holy_Office.jpg&w=640&q=50)
உரோமைச் சமயக் குற்ற விசாரணை
From Wikipedia, the free encyclopedia
உரோமைக் குற்ற விசாரணை, இதனை முறையாக ரோமன் மற்றும் உலகாளவிய திரிபுக் கொள்கை விசாரணையின் உயர் புனித சபை என்பர். இந்த கிறித்துவச் சமயக் குற்ற விசாரணை 1542 முதல் 1650 முடிய ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஆட்சிப் பீடத்தால் நிறுவப்பட்ட திரிபுக் கொள்கை விசாரணை நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டது.[1] இது பரந்த அளவில் கிறித்துவத்திற்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விசாரிக்கும் அமைப்பாகும். உரோமைக் கத்தோலிக்கத் திருச்சபைச் சட்டம் மற்றும் கோட்பாட்டின்படி குற்றங்களின் வரிசை, கத்தோலிக்க மத வாழ்க்கை அல்லது மாற்று மத அல்லது மதச்சார்பற்ற நம்பிக்கைகள் தொடர்பானது. இக்குற்ற விசாரணை சபை, ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் மூன்றாம் பவுல் 1542 இல் நிறுவினார். எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை மற்றும் போர்த்துகீசிய குற்ற விசாரணை ஆகியவற்றுடன் பரந்த கத்தோலிக்க விசாரணையின் மூன்று வெவ்வேறு வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/bd/Galileo_before_the_Holy_Office.jpg/320px-Galileo_before_the_Holy_Office.jpg)