![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/90/Inquisici%25C3%25B3n_espa%25C3%25B1ola.svg/langta-640px-Inquisici%25C3%25B3n_espa%25C3%25B1ola.svg.png&w=640&q=50)
எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை
From Wikipedia, the free encyclopedia
எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை (Spanish Inquisition) அல்லது புனித அலுவலகத்தின் திரிபுக் கொள்கை விசாரணைக்கான நீதிமன்றம் (Tribunal of the Holy Office of the Inquisition) என்பது கத்தோலிக்க ஆட்சியாளர்களாகிய அரகோனின் இரண்டாம் பெர்டினான்டு மற்றும் முதலாம் இசபெல்லா ஆகியோரால் 1478ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் நோக்கம் கத்தோலிக்க மரபினை நாட்டில் பாதுகாக்கவும், திருத்தையின் கட்டுப்பாட்டில் இருந்த மத்தியக்கால சமய விசாரணையின் மாற்றாகவும் இருக்க அமைக்கப்பட்டது. உரோமை திரிபுக் கொள்கை விசாரணை மற்றும் போத்துக்கீய திரிபுக் கொள்கை விசாரணையோடு இதுவும் மிகப்பெரிய திரிபுக் கொள்கை விசாரணையாக கருதப்படுகின்றது.
புனித அலுவலகத்தின் திரிபுக் கொள்கை விசாரணைக்கான எசுப்பானிய நீதிமன்றம் Tribunal del Santo Oficio de la Inquisición எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை | |
---|---|
![]() நீதிமன்றத்தின் சின்னம். | |
வகை | |
வகை | கத்தோலிக்க மரபினை நாட்டில் பாதுகாக்க அரசால் நியமிக்கப்பட்ட விசாரணைக்கான நீதிமன்றம் |
வரலாறு | |
உருவாக்கம் | 1 நவம்பர் 1478 |
செயலிழப்பு | 15 ஜூலை 1834 |
உறுப்பினர்கள் | தலைமை நீதிபதியோடு 6 முதல் 21 வரையான துணை நீதிபதிகள் |
தேர்தல்கள் | |
அரசால் நியமிக்கப்படும் தலைமை நீதிபதி | |
கூடும் இடம் | |
எசுப்பானியப் பேரரசு |
யூதம் மற்றும் இசுலாமிலிருந்து கத்தோலிக்கத்திற்கு மதம் மாறியவர்கள் அதில் நிலைத்திருக்கின்றார்களா எனக்கண்டறியவே இது முதன்முதலில் உருவாக்கப்பட்டது. 1492 மற்றும் 1501இல் யூதர் மற்றும் இசுலாமியர், கத்தோலிக்கத்திற்கு மதம் மாறவேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறவேண்டும் என சட்டம் இயற்றப்பட்டது. அப்போது மதம் மாறியவர்களை ஒழுங்குபடுத்தவே இது இயற்றப்பட்டது. தங்களின் அரசியல் பலத்தைக்கூட்டவும், எதிரிகளின் பலத்தை குறைக்கவும், சமுதாய அமைதியைக்காக்கவும், உள்நாட்டுப் போரினைத்தடுக்கவும், இவ்வமைப்பினால் குற்றம் சாட்டப்பட்டவரின் உடமைகளை கவரவும் இது இயற்றப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவ்வமைப்பு எசுப்பானிய அரசின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் இருந்தது.
1834இல் எசுப்பானியாவின் இரண்டாம் இசபெல்லாவின் ஆட்சிவரை இவ்வமைப்பு நடப்பில் இருந்தது.