![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2d/Inuvil_kanthan.jpg/640px-Inuvil_kanthan.jpg&w=640&q=50)
இணுவில்
From Wikipedia, the free encyclopedia
இணுவில் (Inuvil), இலங்கையின் வடமாகாணத்தில், யாழ்ப்பாண நகரத்துக்கு வடக்கில் சுமார் 5 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள ஒர் ஊர் ஆகும். இது யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. இவ்வீதி இந்த ஊரைக் கிழக்கு இணுவில், மேற்கு இணுவில் என இரு பகுதிகளாகப் பிரிக்கின்றது. இணுவிலுக்கு வடக்கில் உடுவிலும், கிழக்கில் உரும்பிராயும், தெற்கில் கோண்டாவிலும், மேற்குத் திசையில் சுதுமலையும் அமைந்துள்ளன. வேளாண்மைச் செய்கைக்கான சிறு தோட்டங்கள் நிறைந்துள்ள இவ்வூர் புகையிலைச் செய்கைக்குப் பெயர் பெற்றது.[1]
இணுவில் | |
---|---|
![]() Kandaswamy Temple, Inuvil | |
Country | இலங்கை |
Province | Northern |
District | Jaffna |
DS Division | Valikamam South |
அமெரிக்க மிஷனால் நிறுவப்பட்ட மகப்பேற்று மருத்துவமனையான மக்லியொட் மருத்துவமனை மிகவும் புகழ் பெற்றது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் இம் மருத்துவ மனைக்குப் பெருமளவில் வந்தார்கள்.
அந்தவகையில் மிகவும் பெயர் பெற்ற இந்த புண்ணிய பூமியில் சித்தர் பெருமகனார்களும் அதிகமாக வாழ்ந்துவந்தனர் அவர்களுள் வடிவேலர் எனும் சித்தர் பெருமகனார் பரமானந்த வல்லி அம்மன் எனும் ஆலயத்தை பரிபாலித்து சில அற்புதங்களையும் செய்துகாட்டினார் என்பது செவிவழி கதையாக வந்தவை
மற்றும் பிரபல சித்த வைத்தியரான செல்லப்பா பரியாரியார் (அதாவது அந்தகாலத்தில் மருத்துவரை பரியாரியார் என்று கௌரவ அடைமொழி வைத்து கூறுவது வழக்கம்) வாழ்ந்த புண்ணிய பூமி. வைத்தியர் பரம்பரையினர் சித்தர் பரம்பரையினர் வாழ்ந்த அற்புத பூமி.
ஆனாலும் இங்கு வாழ்ந்த ஆதிப் பரம்பரையினரின் வரலாற்றினை சரியான முறையில் இனங்காணமுடிவதில்லை என்பது கவலைக்குரியதொன்றாகும்.