உடுவில்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் / From Wikipedia, the free encyclopedia
உடுவில் (Uduvil) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில், வலிகாமம் பகுதியில், உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமம். இது நான்கு புறமும் நெல் வயல்களும், மரக்கறி விளை நிலங்களும் சூழ்ந்துள்ள ஊர். யாழ்ப்பாண நகருக்கு வடக்கே சுமார் 8 கிலோ மீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. சுன்னாகம், கந்தரோடை, சங்குவேலி, மானிப்பாய், சுதுமலை, இணுவில் என்னும் ஊர்கள் உடுவிலின் எல்லைகளாக அமைந்துள்ளன. யாழ்ப்பாண நகரில் இருந்து வடக்கு நோக்கி உடுவிலைத் தொட்டுச் செல்லும் காங்கேசன்துறை வீதியும், மருதனார்மடம் சந்தியிலிருந்து, மேற்கு நோக்கி உடுவிலை ஊடறுத்துச் செல்லும் கைதடி - மானிப்பாய் வீதியும் உடுவில் ஊடான பிரதான போக்குவரத்து மார்க்கங்களாகும்.
விரைவான உண்மைகள் உடுவில், நாடு ...
உடுவில் | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிரதேச செயலர் பிரிவு | வலிகாமம் தெற்கு |
மூடு