அக்கெனதென்
எகிப்தின் 18ஆவது பேரரசின் மன்னர் / From Wikipedia, the free encyclopedia
அக்கேனதேன் அல்லது நான்காம் அமென்கோதேப் (Akhenaten) (/ˌækəˈnɑːtən/;[1] also spelled Echnaton,[6] Akhenaton,[7] Ikhnaton,[8] and Khuenaten;[9][10] பார்வோன் அக்கெனதேன் புது எகிப்து இராச்சியத்தை (கிமு 1351–1334) 17 ஆண்டுகள் ஆண்ட 18-ஆம் வம்சத்தின் 9-ஆம் பார்வோன் ஆவார். இவர் கிமு 1336 அல்லது 1334-இல் மறைந்தார்.
அக்கெனதென் நான்காம் அமெனோபிசு, நபுருருரேயா, இக்னேதோன்[1] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
எகிப்தின் பாரோ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆட்சிக்காலம் | 1353–1336 BC[2] or 1351–1334 BC[3], எகிப்தின் பதினெட்டாம் வம்சம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முன்னவர் | மூன்றாம் அமென்கோதேப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பின்னவர் | சுமென்க்கரே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரச பட்டங்கள்
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
துணைவி(யர்) | நெஃபர்டீட்டீ கியா மெரிததென் தாடுக்கிபா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிள்ளைகள் | சமென்கரே? மெரிததேன் மெக்கேததென் அன்கேஸ்செனமூன் நெபெர்நெபெருவாதென் தசெரித் நெபெநெருருரே இளவரசி செதெபென்ரே துட்டன்காமன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தந்தை | மூன்றாம் அமென்கோதேப் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தாய் | தீயு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | கிமு 1336 அல்லது 1334 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அடக்கம் | அக்கெனதென் கல்லறை, அமர்னா[5] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நினைவுச் சின்னங்கள் | அமர்னா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மதம் | பண்டைய எகிப்திய சமயம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இவர் தனது இஷ்ட தெய்வமான சூரியக் கடவுளான இராவின் சூரியக் கதிர்களின் தேவதையான அதின் வழிபாட்டை பண்டைய எகிப்தில் புகுத்தியவர். அதின் கடவுளைப் பெருமைபடுத்தும் வகையில், தனது ஐந்தாம் ஆண்டு ஆட்சியின் போது, தனது இயற்பெயரான நான்காம் அமென்கோதேப் என்பதை அக்கெனதேன் எனப்பெயர் மாற்றிக் கொண்டவர். மேலும் எகிப்தில் பல கடவுள் வழிபாட்டை ஒழித்து மக்கள் அனைவரும் அதின் கடவுளை மட்டும் வழிபடும் ஓரிறைக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.
இவரது பட்டத்து இராணி நெஃபர்டீட்டீ அழகும், அறிவும் நிரம்பியவள். அக்கேனதெனின் மறைவிற்குப் பின் பத்தொன்பதாம் வம்ச மன்னர்கள், அக்கெனதென் நிறுவிய கல்லறைகள் மற்றும் கோயில்கள் அழித்ததுடன், எகிப்திய மன்னர்களின் பட்டியலிலிருந்து அக்கெனதேனின் பெயர் நீக்கப்பட்டது. மேலும் அவரது (அதின் கடவுளின்) ஓரிறை வழிபாட்டுக் கொள்கை ஒழிந்து, எகிப்தில் மீண்டும் பாரம்பரியக் கடவுள்களின் வழிபாடு படிப்படியாக வளர்ந்தது. [11][12]
கிபி பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வில், பார்வோன் அக்கெனதேன் நிறுவிய அமர்னா நகரமும், அதின் கடவுளின் கோயிலும் கண்டுபிடிக்கப்பட்டது.[13]
1907-இல் பண்டைய அமர்னா அகழாய்வில் பார்வோன் அக்கெனதேன் மற்றும் அவர் மகன் துட்டன்காமனின் கல்லறைகள் கண்டிபிடிக்கப்பட்டது.[14]