அகத்தியம்
அகத்தியர் அருளிச் செய்த தமிழ் இலக்கண நூல். / From Wikipedia, the free encyclopedia
அகத்தியம் என்பது பண்டைய தமிழி மொழி மற்றும் தற்கால தமிழ் மொழியை உடைய மக்களினத்தைக் குறிக்கும் மிகவும் தொன்மையான தமிழி மற்றும் தமிழ் மொழிக்கான இலக்கண நூல் எனத் தெளிவுபட கருதப்படுகின்றது. அகத்தியர் என்ற புலவர் இயற்றிய நூலாதலால், இது அகத்தியம் என்றும் வழங்கப்படுகின்றது. அகத்தியத்தில் முதல், இடை, கடை என வரையறுக்கப்படும் முச்சங்க காலங்களிலும் இதுவே, தமிழ் இலக்கணத்துக்கான, முதல் நூலாகத் திகழ்ந்தது என்று தமிழ் ஆய்வாளர்கள் ஐயம் இன்றி உரைக்கின்றனர். இது, பிற்கால தமிழ் மொழி இலக்கண நூல்களைப்போல், இயற்றமிழுக்கு மட்டுமன்றி, இசை, நாடகம் ஆகிய முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்ததாகவும் நம்பப்படுகின்றது. தற்காலத்தில், அகத்தியம் படைப்புகளில் சில பகுதிகள் மட்டுமே பல்வேறு தமிழி என்ற தமிழ் பண்டைய நூல்களில் இருந்து கிடைத்துள்ளன. இப்பொழுது நமக்குக் கிடைக்கும் மிகப் பழமையான தமிழி இலக்கண நூலான தொல்காப்பியத்துக்கு மூலநூலும் இதுவே என்று தமிழ் ஆய்வாளர்கள் ஐயம் திரிபுற உரைக்கின்றனர்.
- அகத்தியன் இயற்றிய நூல் அகத்தியம். முச்சங்க வரலாற்றில் வரும் நூல்.
- அகத்தியன் காலத்திற்கு பிறகு வந்தவர் தொல்காப்பியன். தொல்காப்பியரால் தொகுக்கப்பட்ட தொல்காப்பியம் முழுமையாக கிடைத்துள்ளது. அகத்தியரின் மாணவர் தான் தொல்காப்பியர் குறிப்பு எதுவுமில்லை என்ற மாற்றுக் கருத்தும் உண்டு.
- நூற்பாக்கள் மயிலைநாதர் நன்னூலுக்கு எழுதிய உரையிலிருந்து திரட்டப்பட்டுள்ளன.