ஓட்டப்பிடாரம்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

ஓட்டப்பிடாரம்map

ஓட்டப்பிடாரம் (Ottapidaram) என்பது தமிழ் நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சிற்றூராட்சி ஆகும். இது இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல்”, "கப்பலோட்டிய தமிழன்" என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரம் பிறந்த ஊராகும். இது தூத்துக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மன் ஆண்ட பாஞ்சாலங்குறிச்சி இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் அ. இளையராஜா ஆவார். ஓட்டப்பிடாரம் நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

விரைவான உண்மைகள்
ஓட்டப்பிடாரம்
  புறநகர்  
Thumb
ஓட்டப்பிடாரம்
அமைவிடம்: ஓட்டப்பிடாரம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°55′04″N 78°01′22″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
அருகாமை நகரம் திருநெல்வேலி, தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத், இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி தூத்துக்குடி
மக்களவை உறுப்பினர்

கனிமொழி

மக்கள் தொகை 3,000 (2006)
பாலின விகிதம் 500 /
கல்வியறிவு 90% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.