கர்ணபிரயாகை
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
கர்ணபிரயாகை (Karnaprayag) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டம், சமோலி மாவட்டத்தில் பேரூராட்சியுடன் கூடிய நகரம் ஆகும். மேலும் இது கர்ணபிரயாகை வட்டத்தின் நிர்வாகத் தலமையிடம் ஆகும். இது பஞ்ச பிரயாகைகளில் ஒன்றாகும். இவ்வூரில் மந்தாகினி ஆறும், பிந்தர் ஆறும் ஒன்று கூடுகிறது.
கர்ணபிரயாகை | |
---|---|
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கர்ணபிரயாகையின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 30.27°N 79.25°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்ட் |
மாவட்டம் | சமோலி |
வருவாய் வட்டம் | கர்ணபிரயாகை வட்டம் |
ஏற்றம் | 1,451 m (4,760 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 6,976 |
மொழிகள் | |
• அலுவலல் | இந்தி, கார்வாலி மொழி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | UK |
இணையதளம் | uk |
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 7 வார்டுகளும், 1,999 வீடுகளும் கொண்ட கர்ணபிரயாகையின் பேரூராட்சியின் மக்கள்தொகை 8,297 ஆகும். அதில் ஆண்கள் 4,555 மற்றும் பெண்கள் 3,742 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 822 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 91.78% ஆகும். 6-வயதிற்குட்பட்ட குழந்தைகள் 961 which is (11.58%) ஆகவுள்ள
கர்ணபிரயாகை பேருராட்சியின் மக்கள்தொகையில் இந்துக்கள் 93.88%, இசுலாமியர் 5.46%, கிறித்தவர்கள் 0.28%, சீக்கியர்கள் 0.31% மற்றவர்கள் 0.07% ஆகவுள்ளனர்.[1]
உத்தராகண்ட் மாநிலத்தின் இமயமலையில் 1,451 மீட்டர் (4,760 அடி) உயர்த்தில் உள்ள கர்ணபிரயாக் நகரம் 30.27°N 79.25°E பாகையில் அமைந்துள்ளது.[2]
புதுதில்லி-பத்திரிநாத் மற்றும் மணா கணவாயை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 58, கர்ணபிரயாகை வழியாகச் செல்கிறது.
Seamless Wikipedia browsing. On steroids.