50 ரூபாய் பணத்தாள் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
இந்திய 50 ரூபாய் பணத்தாள் (Indian 50-rupee banknote (₹50) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும். தற்போது புழக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி வரிசை ₹50 பணத்தாளானது 1996 முதல் புழக்கத்தில் உள்ளது.
₹50 பணத்தாளானது இந்திய ரிசர்வ் வங்கியால் முதன் முதலில் 1975 இல் சிங்க முத்திரை வரிசை பணத்தாளாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முதல் பக்கத்தில் அசோகத் தூண் இடம் பெற்றது. இதற்கு பதிலாக 1996 இல் மகாத்மா காந்தி நிழலுருவம் இடம்பிடித்தது.[1]