மகாத்மா காந்தி வரிசை
From Wikipedia, the free encyclopedia
காந்தி வரிசை (Gandhi Series) என்பது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட இந்திய ரூபாய் பணத்தாள்கள் ஆகும். இந்த பணத் தாள்களில் முதன்மையாக மகாத்மா காந்தியின் உருவம் இடம்பெற்றதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. 1996 இல் அறிமுகப்படுத்தப்பட்ட, இந்த வரிசை 1996 க்கு முன்பாக வழக்கிலிருந்த அனைத்து பணத்தால்களின் வடிவத்தையும் மாற்றி இந்த வரிசை இடம்பிடித்தது. இந்திய ரிசர்வ் வங்கி 1996 இல் தொடங்கி 10 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளில் இந்த வரிசையில் அறிமுகப்படுத்தியது.
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் திகதி இந்த வரிசையில் உள்ள 500 மற்றும் 1000 பணத்தாள்களின் மதிப்பு நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புதியதாக 500 மற்றும் 2000 மதிப்பலான மகாத்மா காந்தி புதிய வரிசை நோட்டுகள் வெளியிடப்பட்டன.