2022 ஜி-20 பாலி உச்சிமாநாடு
From Wikipedia, the free encyclopedia
ஜி-20 பாலி உச்சிமாநாடு, 2022 இந்தோனேசியாவின் அதிபர் ஜோக்கோ விடோடோ தலைமையில் பாலித் தீவில் 15 மற்றும் 16 நவம்பர் 2022 ஆகிய இரண்டு நாட்களாக நடைபெற்றது. இது இருபது நாடுகளில் குழுவின் (G20) பதினேழாவது கூட்டமாகும்.[3]
விரைவான உண்மைகள் ஜி-20 பாலி உச்சிமாநாடு, இடம்பெற்ற நாடு ...
ஜி-20 பாலி உச்சிமாநாடு | |
---|---|
இடம்பெற்ற நாடு | இந்தோனேசியா |
தேதி | 15–16 நவம்பர் 2022[1] |
இடம் | அபூர்வா கெம்பின்ஸ்சி, பாலி[2] |
நகரம் | நூசா துவா, பண்டுங் ரீஜென்சி, பாலி (மாநாடு நடத்தும் நாடு) |
பங்குகொள்வோர் | ஜி-20 உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள்: கம்போடியா பிஜி நெதர்லாந்து ருவாண்டா செனகல் சிங்கப்பூர் எசுப்பானியா சுரிநாம் உக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் |
முன்னையது | 2021 G20 உரோம் உச்சிமாநாடு |
பின்னையது | 2023 G20 புது தில்லி உச்சி மாநாடு |
இணையதளம் | g20 |
மூடு
2021 ஜி-20 ரோம் உச்சி மாநாட்டின் முடிவில் இம்மாநாட்டின் தலைமைப் பதவி 1 டிசம்பர் 2021 அன்று இத்தாலிய பிரதமர் மரியோ டிராகியிடமிருந்து, இந்தோனேசியாவின் அதிபர் ஜோக்கோ விடோடோவுக்கு மாற்றப்பட்டது. 2023-ஆம் ஆண்டிற்கான உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறுவதால், இதன் தலைமைப் பதவியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியிடம், இந்தோனேசிய அதிபர் இம்மாநாட்டின் முடிவில் வழங்கினார்.[4][5]