![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1c/Joko_Widodo_2014_official_portrait.jpg/640px-Joko_Widodo_2014_official_portrait.jpg&w=640&q=50)
ஜோக்கோ விடோடோ
From Wikipedia, the free encyclopedia
ஜோக்கோ விடோடோ (Joko Widodo, 21 சூன் 1961) இந்தோனேசிய அரசியல்வாதியும் தற்போதைய ஜகார்த்தா ஆளுநருமாவார். இவர் அடுத்த இந்தோனேசியக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[1] இவர் பரவலாக ஜோக்கோவி என அழைக்கப்படுகிறார். அதிபர் தேர்தலில் வெற்றி பெறும் முன், ஜகார்தா மாகாண கவர்னராக இருந்தார்.
ஜோக்கோ விடோடோ | |
---|---|
![]() ஜகார்த்தாவின் ஆளுநராக அலுவல்முறைப் படிமம் (2014) | |
இந்தோனேசியாவின் குடியரசுத் தலைவர் தேர்வு | |
பதவியில் 20 அக்டோபர் 2014 | |
Vice President | யூசஃப் கல்லா |
Succeeding | சுசீலோ பாம்பாங் யுதயோனோ |
ஜகார்த்தாவின் 15வது ஆளுநர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 15 அக்டோபர் 2012 | |
Deputy | பாசுகி இத்யஹஜா புர்னமா |
முன்னையவர் | ஃபௌசி போவோ |
பின்னவர் | பாசுகி இத்யஹஜா புர்னமா |
சுரகார்த்தா மேயர் | |
பதவியில் 28 சூலை 2005 – 1 அக்டோபர் 2012 | |
Deputy | எஃப். எக்சு. ஹடி ருத்யாத்மோ |
முன்னையவர் | இசுலாமெட் சூர்யந்தோ |
பின்னவர் | எஃப். எக்சு. ஹடி ருத்யாத்மோ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 21 சூன் 1961 (1961-06-21) (அகவை 63) சுரகார்த்தா, இந்தோனேசியா |
அரசியல் கட்சி | இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி - போராட்டம் |
துணைவர் | இரியானா |
பிள்ளைகள் | கிப்ரான் ராகபுமிங் கஹியாங் ஆயு கேசங் பங்காரெப் |
முன்னாள் கல்லூரி | கஜா மடா பல்கலைக்கழகம் |
சிறப்புப்பெயர் | "ஜோக்கோவி" |
கையெழுத்து | ![]() |
சூலை 22, 2014 அன்று ஜோக்கோவி 53.15% வாக்குகளைப் பெற்று எதிராகப் போட்டியிட்டு 46.85% வாக்குகளைப் பெற்ற பிரபோவோவைத் தோற்கடித்து இந்தோனேசியாவின் ஏழாவது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்டோபர் 20, 2014இல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொள்வார்.
2012 இல் ஜகார்த்தாவின் ஆளுநராக தேர்தலில் வென்றபிறகு இவரது புகழ் வளர்ந்து வந்தது. இந்தோனேசிய மக்களாட்சிக் கட்சி - போராட்டம் [PDI-P] கட்சித் தலைவர் மேகவதி சுகர்னோபுத்ரி ஏப்ரல் 9 நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல்கள் முடிவுறும் வரை குடியரசுத் தலைவருக்கானத் தேர்தல் வேட்பாளரை அறிவிக்கப்போவதில்லை என கூறியிருந்தார். ஆனால் ஜோக்கோவிக்கு இருந்த பரவலான ஆதரவினால் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டால் நாடாளுமன்ற தேர்தலிலும் கூடுதல் வாக்குகள் கிடைக்கும் எனக் கருதி தேர்தலுக்கு மூன்று வாரங்கள் முன்னரே, மார்ச்சு 14, 2014இல் இவரை குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளராக அறிவித்தார்.[2]