1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
1987 துடுப்பாட்ட உலகக் கிண்ணம் (1987 Cricket World Cup, கிரிக்கெட் உலகக்கோப்பை 1987) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் உலகக் கிண்ணத்துக்கான நான்காவது போட்டியாகும். இக்கிண்ணம் ரிலயன்ஸ் கிண்ணம் (Reliance Cup) என அழைக்கப்படுகின்றது. இப்போட்டிகள் இந்தியா, பாக்கித்தான் ஆகிய நாடுகளில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 8 முதல் நவம்பர் 8 வரை நடைபெற்றது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு வெளியில் உலகக் கிண்ணத்தை நடத்திய முதல் நாடுகளாக இவை பதிவாயின. இதில் அணிக்கு 60 ஓவர்கள் என்ற வழக்கமான விதி மாற்றப்பட்டு அணிக்கு 50 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்தைப் போலன்றி துணைக் கண்ட நாடுகளில் பகல் வேளை நீண்ட நேரம் நீடிக்காமை காரணமாகவே இந்த விதி மாற்றப்பட்டது[1]. அத்துடன் 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற 8 அணிகளும் இந்த போட்டித் தொடரிலும் விளையாடின. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகித்தான் ஆகியன அரையிறுதி வரை முன்னேறினாலும் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற முடியாமல் போயின. இங்கிலாந்து, அவுத்திரேலிய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுத்திரேலியா 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி முதல் முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது.
![]() ஆத்திரேலிய அணித் தலைவர் அலன் போர்டர் வெற்றிக்கிண்ணத்துடன் | |
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர்சுழல் முறை, வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | ![]() ![]() |
வாகையாளர் | ![]() |
மொத்த பங்கேற்பாளர்கள் | 8 |
மொத்த போட்டிகள் | 27 |
அதிக ஓட்டங்கள் | ![]() |
அதிக வீழ்த்தல்கள் | ![]() |
← 1983 1992 → |