100 ரூபாய் பணத்தாள் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
இந்திய 100 ரூபாய் பணத்தாள் (Indian 100-rupee banknote (₹100) என்பது இந்திய ரூபாயின் ஒரு பொதுவான பணத்தாள் வரிசையில் ஒன்று ஆகும். இந்தப் பணத்தாளானது இந்திய ரிசர்வ் வங்கியால் முதன் முதலில் 1935 இல் இருந்து பணத்தாளாக அறிமுகப்படுத்தப்பட்டு, தொடர்ச்சியாக அச்சிடப்பட்டு வருகிறது. தற்போது புழக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி வரிசை ₹100 பணத்தாளானது 1996 முதல் புழக்கத்தில் உள்ளது.
முதலில் வெளியான 100 ரூபாய் பணத்தாளில் மன்னர் ஆறாம் ஜார்ஜ்ஜின் சித்திரம் இடம்பெற்றது. 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட பணத்தாளில், ஆறாம் ஜார்ஜ்ஜின் உருவப்படத்துக்கு பதிலாக இந்திய தேசிய இலட்சினையில் உள்ள சிங்க உருவத்தின் படம் போடப்பட்டது.[1]