![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c6/Glory_Of_Viluppuram_2.jpg/640px-Glory_Of_Viluppuram_2.jpg&w=640&q=50)
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஒரு நகர்ப்பகுதி / From Wikipedia, the free encyclopedia
விழுப்புரம் (Vizhuppuram, ஒலிப்புⓘ) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும், ஒரு ' சிறப்பு நிலை நகராட்சி ' ஆகும். இதுவே விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது.[2] 1993 ஆம் ஆண்டில், முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு, பின்னர் 'விழுப்புரம்' என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]
விழுப்புரம்
விழிமா நகரம் | |
---|---|
![]() | |
ஆள்கூறுகள்: 11.940100°N 79.486100°E / 11.940100; 79.486100 | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
பகுதி | தொண்டை நாடு |
மாவட்டம் | விழுப்புரம் |
அரசு | |
• வகை | சிறப்பு நிலை நகராட்சி் |
• நிர்வாகம் | விழுப்புரம் நகராட்சி் |
• மக்களவை உறுப்பினர் | து. இரவிக்குமார் |
• சட்டமன்ற உறுப்பினர் | ஆர். லட்சுமணன் |
• மாவட்ட ஆட்சியர் | சி. பழனி இ.ஆ.ப |
• காவல் கண்காணிப்பாளர் | ஜி. ஷஷாங்க் சாய் இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 33.13 km2 (12.79 sq mi) |
ஏற்றம் | 71 m (233 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 96,253 |
• அடர்த்தி | 2,900/km2 (7,500/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 605 601, 605 602, 605 401, 605 103, 605 301 |
தொலைபேசி குறியீடு | +91–4146(STD Code) |
வாகனப் பதிவு | TN–32 |
சென்னையிலிருந்து தொலைவு | 170 கி.மீ (105 மைல்) |
பாண்டிச்சேரியிலிருந்து தொலைவு | 40 கி.மீ (25 மைல்) |
சேலத்திலிருந்து தொலைவு | 178 கி.மீ (110 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 160 கி.மீ (99 மைல்) |
பாலின விகிதம் | 1019 ♂/♀ |
எழுத்தறிவு | 90.16% |
காலநிலை | தட்பவெப்ப நிலை (கோப்பென்) |
இணையதளம் | viluppuram |
இந்நகரம், திருச்சி – சென்னை சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45-இன் மற்றும் வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் - தூத்துக்குடி சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 38-இன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது; மற்றும் தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் (பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது.
விழுப்புரத்தின் முக்கிய வருமானம் விவசாயம் சார்ந்த தொழில்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை சுமார் 96,253 ஆகும். 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகை ஆய்வின்படி, எழுத்தறிவு சதவீதம் 90.16% ஆகும்.[4]
மாவட்டத் தலைநகர் எனும் தகுதி, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை அடங்கிய பெருந்திட்ட வளாகம், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்கள், பிரம்மாண்ட பேருந்து நிலையம், விரிவுபடுத்தப்பட்ட இரயில் சந்திப்பு, புறவழிச்சாலை, அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்கள் என முன்னேற்றமடைந்து வருகிறது.