வங்காளதேசத்தில் சுற்றுலா
From Wikipedia, the free encyclopedia
வங்காளதேசத்தில் சுற்றுலா (Tourism in Bangladesh) என்பது வரலாற்று நினைவுச்சின்னங்கள், தங்கும் விடுதிகள், கடற்கரைகள், சுற்றுலா இடங்கள், காடுகள் மற்றும் பழங்குடி மக்கள், பல்வேறு உயிரினங்களின் வனவிலங்குகள் ஆகியவை அடங்கும். சுற்றுலாப் பயணிகளுக்கான செயல்பாடுகளில் படகு விளையாட்டுகள், மீன்பிடித்தல், தண்ணீரில் சறுக்குதல், ஆற்றுப் பயணம், நாடு முழுவதும் மேற்கொள்ளும் பயணம், படகுப் பயணம், கடல் குளியல் ஆகியவை அடங்கும். [1]
ராஜசாகி பிரிவை உள்ளடக்கிய வடக்கு பகுதியில், கோயில் நகரமான புத்தியா உள்ளிட்ட தொல்பொருள் இடங்கள் உள்ளன. போக்ராவிலுள்ள உள்ள மகஸ்தாங்கர்; நாகோகானில் உள்ள பகார்பூர் சோமபுரம் மகாவிகாரை, மிகவும் அலங்காரமான சுடுமண்ணால் செய்யப்பட்ட இந்துக் கோயில், காந்தாஜி கோயில் மற்றும் பல ராஜ்பாரிகள் அல்லது பழைய ஜமீந்தார்களின் அரண்மனைகள் போன்ற மிகப் பெரிய மற்றும் மிகப் பழமையான தொல்பொருள் தளங்கள் இருக்கின்றன.
சிட்டகாங் பிரிவான தென்கிழக்கு பகுதியில், மணல் கடல் கடற்கரைகளுடன் சிட்டகாங் மலைப்பகுதிகள் போன்ற இயற்கை மற்றும் மலைப்பாங்கான பகுதிகள் உள்ளன. காக்ஸ் பஜாரில் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க கடற்கரை, உலகின் மிக நீளமான உடைக்கப்படாத மணல் கடல் கடற்கரையாகும்.
தென்மேற்கு பகுதியில், முக்கியமாக குல்னா பிரிவில், சுந்தரவனகாடுகள் உள்ளது இது உலகின் மிகப்பெரிய சதுப்புநில காடான இதில், வங்காளப் புலிகளும், புள்ளிமான்களும் வாழ்கின்றன. பாகர்ஹாட்டில் உள்ள வரலாற்று மற்றும் கட்டடக்கலை முக்கியத்துவம் வாய்ந்த அறுபது தூண்கள் பள்ளிவாசல் ஒரு குறிப்பிடத்தக்க தளமாகும். வடகிழக்கு பகுதியான சில்ஹெட் பிரிவில், சிறிய மலைகளில் தேயிலை செடிகளின் பச்சை கம்பளம் உள்ளது. இயற்கை அமையப்பட்ட காடுகள் சுற்றுலாவிற்கு சிறந்த இடங்களாகும். குளிர்காலத்தில் புலம் பெயர்ந்த பறவைகள், குறிப்பாக ஹோர் பகுதிகளில், இந்த பகுதியில் மிகவும் இரசிக்கத்தகதாகும்.
சுற்றுலா அமைச்சகம் மற்றும் உள்ளூர் விமான போக்குவரத்து அமைச்சகம் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் பிரபலபடுத்துவதற்கும் தேசிய கொள்கைகளை வடிவமைக்கின்றன. அழகான வங்காளதேசம் என்ற பிரச்சாரத்தையும் அமைச்சகம் பராமரிக்கிறது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை சிறப்பாகப் பாதுகாப்பதற்காக சுற்றுலா காவலர் பிரிவை வங்கதேச அரசு உருவாக்கியுள்ளது.