யோவான் கிறிசோஸ்தோம்
From Wikipedia, the free encyclopedia
புனித யோவான் கிறிசோஸ்தோம் அல்லது புனித பொன்வாய் அருளப்பர் (சுமார். 347–407, கிரேக்க மொழி: Ἰωάννης ὁ Χρυσόστομος), காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயராக இருந்தவர். இவர் மிக முக்கியமான திருச்சபைத் தந்தையர்களுல் ஒருவராவார். இவர் பெரிய எழுத்தாளர், மறையுரையாளர், விவிலிய விரிவுரையாளர். இறையியலாளர். இவரால் திருச்சபையில் பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டன. இவரது மறை உரையின் மேன்மையினை உனர்த்தும் விதமாக மக்கள் இவரை பொன்வாய் என்னும் பொருள்படும்படி கிரேக்கத்தில் கிறிசோஸ்தோமோஸ் என அழைத்தனர். இதுவே பிற்காலத்தில் இவரின் பெயர் ஆயிற்று.[2][4]
விரைவான உண்மைகள் புனித யோவான் கிறிசோஸ்தோம்புனித பொன்வாய் அருளப்பர், ஆயர் மற்றும் மறைவல்லுநர் ...
புனித யோவான் கிறிசோஸ்தோம் புனித பொன்வாய் அருளப்பர் | |
---|---|
ஆயர் மற்றும் மறைவல்லுநர் | |
பிறப்பு | சுமார். 347[1] அந்தியோக்கியா |
இறப்பு | 14 செப்டம்பர் 407[2] கோமானா, போன்தசு[2] |
ஏற்கும் சபை/சமயங்கள் | கிழக்கு மரபுவழி திருச்சபை கத்தோலிக்க திருச்சபை ஆங்கிலிக்கம் லூதரனியம் |
திருவிழா | கிழக்கு மரபுவழி திருச்சபை: 13 நவம்பர் (ஆயர்நிலை திருப்பொழிவு நாள்) கத்தோலிக்க திருச்சபை:13 செப்டம்பர் |
சித்தரிக்கப்படும் வகை | ஆயர் உடையில் ஆசீர் வழங்குவது போன்று, நற்செய்தி அல்லது மறைநூலைத் தாங்கிய படி. தேனீக்களின் கூடு, வெள்ளை புறா,[3] விவிலியம், எழுதுகோல் |
பாதுகாவல் | காண்ஸ்டாண்டிநோபுள், கல்வி, விழுநோயாளிகள், ஆசிரியர்கள், பேச்சாளர்கள்[3] |
மூடு