![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ea/Coat_of_arms_of_Maurizio_Malvestiti.svg/langta-640px-Coat_of_arms_of_Maurizio_Malvestiti.svg.png&w=640&q=50)
மௌரீட்சியோ மாலுவெஸ்திதி
From Wikipedia, the free encyclopedia
மௌரீட்சியோ மாலுவெஸ்திதி (பிறப்பு ஆகஸ்ட் 25, 1953) என்பவர் லோடி மறைமாவட்டத்தின் தற்போதைய ஆயர் ஆவார். ஆகஸ்ட் 26, 2014[1] அன்று மேதகு. ஜொசெப்பே மெரிசிக்குப்பின்பு இவர் ஆயராக நியமிக்கப்படார்.[2]
விரைவான உண்மைகள் மேதகு மௌரீட்சியோ மாலுவெஸ்திதி, சபை ...
மேதகு மௌரீட்சியோ மாலுவெஸ்திதி | |
---|---|
லோடி மறைமாவட்ட ஆயர் | |
![]() | |
சபை | கத்தோலிக்க திருச்சபை |
ஆட்சி பீடம் | லோடி மறைமாவட்டம் |
ஆட்சி துவக்கம் | 2014 முதல் |
முன்னிருந்தவர் | ஜொசெப்பே மெரிசி |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | ஜூன் 11, 1977 மேதகு. கிளமென்தே காடி-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | அக்டோபர் 11, 2014 கர்தினால் இலியனார்தோ சன்டிரி-ஆல் |
பிற தகவல்கள் | |
பிறப்பு | ஆகத்து 25, 1953 (1953-08-25) (அகவை 70) பிலாகோ, ![]() |
குடியுரிமை | இத்தாலியர் |
வகித்த பதவிகள் | பெர்காமோ குருத்துவக்கல்லூரியில் பேராசிரியர் கீழைமுறைத்திருச்சபையின் பேராயத்தின் உறுப்பினர் |
மூடு
இவர் 1953ஆம் ஆண்டு இத்தாலியின் பிலாகோவில் பிறந்தார். 1977இல் குருத்துவத் திருநிலைப்பாடு பெற்றார். பின்னர் உரோமையில் உயர்கல்வி கற்றார். 1978 முதல் 1994 முடிய பெர்காமோ குருத்துவக்கல்லூரியில் பேராசிரியராகப்பணியாற்றினார். 1994 முதல் 2009 வரை கீழைமுறைத்திருச்சபையின் பேராயத்தின் உறுப்பினராக இருந்தார்.
ஆகஸ்ட் 26, 2014, திருத்தந்தை பிரான்சிசு இவரை லோடி மறைமாவட்டத்தின் ஆயராக நியமித்தார்.[3][4] அக்டோபர் 11, 2014 அன்று பேதுரு பேராலயத்தில் கர்தினால் இலியனார்தோ சன்டிரியால் இவர் ஆயர்நிலைக்கு திருப்பொழிவு செய்யப்பட்டார்.[5]