மால்கம் ரஞ்சித்
From Wikipedia, the free encyclopedia
ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் (Albert Malcolm Ranjith Patabendige Don) அல்லது சுருக்கமாக மால்கம் ரஞ்சித் (பிறப்பு: நவம்பர் 15, 1947), இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயரும் கர்தினாலும் ஆவார்.[1]
விரைவான உண்மைகள் மேதகு ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன், சபை ...
மேதகு ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் | |
---|---|
கொழும்பு உயர்மறைமாவட்டப் பேராயர்; சான் லொரேன்சோ இன் லுச்சீனா-வின் கர்தினால்-குரு | |
சபை | கத்தோலிக்க திருச்சபை |
உயர் மறைமாவட்டம் | கொழும்பு, இலங்கை |
மறைமாநிலம் | கொழும்பு |
மறைமாவட்டம் | கொழும்பு |
ஆட்சி பீடம் | கொழும்பு உயர்மறைமாவட்டம், இலங்கை |
ஆட்சி துவக்கம் | 16 சூன் 2009 (14 ஆண்டுகள், 349 நாட்கள்) |
முன்னிருந்தவர் | ஒசுவல்ட் கோமிசு |
பிற பதவிகள் |
|
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | சூன் 29, 1975 திருத்தந்தை ஆறாம் பவுல்-ஆல் |
ஆயர்நிலை திருப்பொழிவு | சூன் 17, 1991 பேராயர் நிக்கோலாஸ் மாற்கஸ் பெர்னாண்டோ-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | நவம்பர் 20, 2010 |
கர்தினால் குழாம் அணி | குருக்கள் அணி; சான் லொரேன்சோ இன் லுச்சீனா-வின் கர்தினால்-குரு |
பிற தகவல்கள் | |
பிறப்பு | நவம்பர் 15, 1947 (1947-11-15) (அகவை 76) பொல்காவலை, குருநாகலை |
குடியுரிமை | இலங்கை |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
இல்லம் | கொழும்பு, இலங்கை |
பெற்றோர் | வில்லியம் டொன், மேரி வினிஃப்ரீடா |
குறிக்கோளுரை | இலத்தீன்: Verbum caro factum est (வாக்கு மனிதர் ஆனார்) |
மூடு
இவர் இலங்கையிலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டாம் கர்தினால் ஆவார். இவருக்கு முன் இலங்கையின் முதல் கர்தினாலாக இருந்தவர் தோமாஸ் கூரே (கர்தினால்: 1965-1988).[2]