மாதுரி கனிட்கர்
From Wikipedia, the free encyclopedia
மாதுரி கனிட்கர் (Madhuri Kanitkar) அதி விசிட்ட சேவா பதக்கம், விசிட்ட சேவா பதக்கம் போன்ற பதக்கங்களை பெற்ற இவர் இந்திய இராணுவத்தின் தளபதியாவார். இராணுவத் தளபதி புனிதா அரோரா மற்றும் ஏர் மார்ஷல் பத்மா பந்தோபாத்யா ஆகியோருக்குப் பிறகு, இந்திய ஆயுதப்படைகளில் மூன்று நட்சத்திர பதவிக்கு உயர்த்தப்பட்ட மூன்றாவது பெண் இவர். [1] இவர் தற்போது பாதுகாப்புப் படைத் தலைவரின் கீழ் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர்களின் (மருத்துவ) துணைத் தலைவராக பணியாற்றுகிறார் . [2] இவர் பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு ஆலோசனைக் குழுவிலும் (PM-STIAC) பணியாற்றுகிறார். [3]
இந்தியாவின் இராணுவத் தளபதி மாதுரி கனிட்கர் | |
---|---|
பிறப்பு | 1961 |
சார்பு | ![]() |
சேவை/ | ![]() |
சேவைக்காலம் | 1983 – present |
தரம் | ![]() |
விருதுகள் | ![]() ![]() |
இவரது கணவர், லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் கனிட்கர், ஓய்வு பெற்ற பொது அதிகாரி மற்றும் கடைசியாக இந்திய ராணுவத்தின் ஜெனரலாக பணியாற்றினார். இவர்கள் இந்திய ஆயுதப் படையில் மூன்று நட்சத்திர தரத்தை எட்டிய முதல் இணயாக இருக்கின்றன. [4]