மாதரம் இராச்சியம்
பண்டைய வம்சம் / From Wikipedia, the free encyclopedia
மாதரம் இராச்சியம் (Mataram Kingdom) [2] [3] என்பது பொ.ச. 8 -11 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில்இந்தோனீசியாவில் உள்ள சாவகத் தீவில் செழித்தோங்கிய ஒரு இந்து - பௌத்த இராச்சியமாகும். இது நடுச் சாவகத்திலும் பின்னர் கிழக்கு சாவகத்திலும் அமைந்திருந்தது. சஞ்சயன் என்ற மன்னனால் நிறுவப்பட்ட இந்த இராச்சியத்தை சைலேந்திர வம்சமும், ஈசான வம்சமும் ஆட்சி செய்தன .
மாதரம் இராச்சியம் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பொ.ச.716–பொ.ச.1016 | |||||||||
தலைநகரம் | மம்ரதிபுரம் போ பிட்டு தம்லாங் வடுகலுக் | ||||||||
பேசப்படும் மொழிகள் | பழைய சாவக மொழி, சமசுகிருதம் | ||||||||
சமயம் | இந்து சமயம், பௌத்தம், அனிமியம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||
மகாராஜா | |||||||||
• பொ.ச.716–746 (முதல்) | சஞ்சயன் | ||||||||
• பொ.ச.985–1016 (கடைசி) | தர்மவங்சன் | ||||||||
வரலாற்று சகாப்தம் | இடைக்கால தென்கிழக்காசியா | ||||||||
• சஞ்சயன்[1] | பொ.ச.716 | ||||||||
• சிறீவிஜயத்திடமும் வூரவாரியிடமும் தர்மவங்சனின் தோல்வி | பொ.ச.1016 | ||||||||
நாணயம் | மாசா, தகில் (சொந்த தங்க, வெள்ளி நாணயம்) | ||||||||
|
அதன் வரலாற்றின் பெரும்பகுதியின் போது, இராச்சியம் விவசாயத்தை, குறிப்பாக விரிவான நெல் விவசாயத்தை பெரிதும் நம்பியிருப்பதாகத் தெரிகிறது. மேலும் பின்னர் கடல் வணிகத்திலும் பயனடைந்தது. வெளிநாட்டு ஆதாரங்கள் மற்றும் தொல்லியல் சான்றுகளின்படி, இராச்சியம் அதிகளவில் மக்கள்தொகை கொண்டதாகவும், மிகவும் செழிப்பானதாகவும் இருந்ததாகத் தெரிகிறது. இராச்சியம் ஒரு பலதரபட்ட சமுதாயத்தை உருவாக்கியது.[4] நன்கு வளர்ந்த கலாச்சாரம் இருந்தது. மேலும் நுட்பமான மற்றும் செம்மையான நாகரீகத்தை அடைந்தது.
பொ.ச. 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து 9ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில், இராச்சியம் பாரம்பரிய சாவகக் கலை மற்றும் கட்டிடக்கலையின் மலர்ச்சியைக் கண்டது. இது கோயில் கட்டுமானத்தின் விரைவான வளர்ச்சியில் பிரதிபலிக்கிறது. மாதரத்தில் அதன் மையப்பகுதியின் நிலப்பரப்பில் பல கோயில்கள் அமைந்திருந்தன. கலாசான் கோயில், செவு கோயில் , பிரம்பானான் கோயில் , போரோபுதூர் கோயில், பிரம்பானான் கோயில் போன்றவை மாதரத்தில் கட்டப்பட்ட கோவில்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவை அனைத்தும் இன்றைய யோக்யகர்த்தா நகருக்கு மிக அருகில் உள்ளன. [5] அதன் உச்சத்தில், இராச்சியம் ஒரு மேலாதிக்கப் பேரரசாக மாறியது - சாவகத்தில் மட்டுமல்ல, சுமாத்ரா, பாலி, தெற்கு தாய்லாந்து, பிலிப்பீன்சின் இந்தியமயமாக்கப்பட்ட இராச்சியங்கள் , கம்போடியாவில் கெமர் பேரரசு போன்றவை. [6] [7] [8]
பின்னர் வம்சம் மத ஆதரவால் பௌத்த மற்றும் சைவத்துவ வம்சங்கள் என அடையாளம் காணப்பட்ட இரண்டு இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டது. உள்நாட்டுப் போர் ஏற்பட்டதையடுத்து மாதரம் இராச்சியம் இரகாய் பிகாடன் தலைமையிலான சாவகத்தின் மாதரம் இராச்சியத்தின் சைவத்துவ வம்சம் என்றும் பாலபுத்ரதேவன் தலைமையிலான சுமாத்ராவின் சிறீவிஜய இராச்சியத்தின் பௌத்த வம்சம் எனவும் இரண்டு சக்திவாய்ந்த இராச்சியங்களாகப் பிரிக்கப்பட்டது. பொ.ச.1016ஆம் ஆண்டு சிறீவிஜயத்தை தளமாகக் கொண்ட சைலேந்திர குலத்தினர் மாதரம் சாம்ராச்சியத்தின் அடிமையான வுராவாரியால் கிளர்ச்சியைத் தூண்டி, கிழக்கு சாவகத்திலுள்ள வடுகலுவின் தலைநகரைக் கொள்ளையடிக்கும் வரை அவர்களுக்கு இடையேயான பகை முடிவுக்கு வரவில்லை. சிறீவிஜய பிராந்தியத்தில் மறுக்கமுடியாத மேலாதிக்கப் பேரரசாக உயர்ந்தது. சைவத்துவ வம்சம் தப்பிப்பிழைத்தது. பொ.ச. 1019-இல் கிழக்கு சாவகத்தை மீட்டெடுத்தது. பின்னர் பாலியின் உதயணனின் மகன் ஏர்லாங்கா தலைமையில் ககுரிபன் இராச்சியம் நிறுவப்பட்டது.