மணிப்பூர்
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
மணிப்பூர் (Manipur), வடகிழக்கு இந்தியாவிலுள்ள ஒரு மாநிலமாகும். மணிப்பூர் முன்னர் பிரித்தானிய இந்தியாவில் 1947 வரை முடியாட்சியுடன் கூடிய மணிப்பூர் இராச்சியமாக விளங்கியது. 1949-இல் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1956 வரை இந்தியாவின் ஒன்றியப் பகுதியாக இருந்தது. 1972-இல் தனி மாநிலத் தகுதி கிடைத்தது.
மணிப்பூர்
Kangleipak (மணிப்புரியம்) | |
---|---|
சின்னம் | |
குறிக்கோளுரை: கங்லாஷா (டிராகன் பிரபு) | |
பண்: சனா லீபக் மணிப்பூர்[1] (மணிப்பூர் தங்க நிலம்) | |
நாடு | இந்தியா |
இந்தியாவுடன் இணைந்தது | 15 அக்டோபர் 1949[2] |
தலைநகரம் | இம்பால் |
மாவட்டங்கள் | 16 |
அரசு | |
• நிர்வாகம் | மணிப்பூர் அரசு |
• ஆளுநர் | [அனுசுயா உய்கே ]][3] |
• முதலமைச்சர் | ந. பீரேன் சிங் (பா.ச.க.)[4] |
• சட்டப் பேரவை | மணிப்பூர் சட்டமன்றம் ஓரவை (60 தொகுதிகள்) |
• நாடாளுமன்ற தொகுதிகள் |
|
• உயர் நீதிமன்றம் | மணிப்பூர் உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 22,327 km2 (8,621 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 23வது |
மக்கள்தொகை (2011[5]) | |
• மொத்தம் | 28,55,794 |
• தரவரிசை | 23வது |
• அடர்த்தி | 130/km2 (330/sq mi) |
மொழிகள் | |
• மாநில மொழி | மணிப்புரியம்[6][7] |
மொ.உ.உ. (2017–18) | |
• ஜி.எஸ்.டி.பி. | ₹23,968 கோடி (US$3.0 பில்லியன்) |
• தனிநபர் மொ.உ.உ. | ₹75,226 (US$940) |
நேர வலயம் | ஒசநே+05:30 (இ.சீ.நே.) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MN |
ம.மே.சு. (2018) | 0.696[8] மத்திமம் · 15வது |
படிப்பறிவு | 79.85% (16வது) |
இணையதளம் | manipur |
சின்னங்கள் | |
சின்னம் | கங்லா ஷா |
மொழி | மணிப்புரியம் |
பாடல் | "சனா லீபக் மணிப்பூர்" (மணிப்பூர் தங்க நிலம்) |
விலங்கு | சங்காய் மான் (ருசெர்வஸ் எல்டி எல்டி) |
பறவை | பகட்டு வண்ணக் கோழி (சிர்மாடிகசு ஹுமியா) |
மீன் | பென்காபா[9] |
மலர் | சிரோய் லில்லி (லிலியம் மாக்லினியா) |
மரம் | யுனிங்தோ (ஃபோப் ஹைனேசியானா) |
† இது வட-கிழக்கு பகுதிகள் (மறுசீரமைப்பு) சட்டம், 1971 மூலம் யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்தில் இருந்து உயர்த்தப்பட்டது. |
இதன் தலை நகரம் இம்பால். மணிப்பூர், இந்திய மாநிலங்களான நாகலாந்து, மிஸோரம், அஸ்ஸாம் என்பவற்றை முறையே, வடக்கு, தெற்கு, மேற்கு ஆகிய திசைகளிலும், கிழக்கில் மியன்மாருடன் அனைத்துலக எல்லையொன்றையும் கொண்டுள்ளது.
இந்த மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மைத்தி (Meitei) இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் தம் பரம்பரை மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் ஆண்டில் இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது சப்பானியப் படைகளுக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையே நடைபெற்ற கடும்போரின் பல சண்டைகளுக்கு இப்பிரதேசம் களமாக விளங்கிற்று. ஜப்பானிய படைகள் கிழக்காசியாவில் வெற்றி கண்டு மணிப்பூர் வரை தாக்கினர். ஆனால் இம்பால் நகரை தம் ஆட்சிக்குள் கொண்டு வர முயலும்போது அவர்கள் தோல்வியடைந்தனர். போரின் தொடர்ச்சியில் இந்நிகழ்வு ஒரு திருப்புமுனையாய் விளங்கியது. அப்போரில் காலமான இந்திய போர்வீரர்களுக்கும் கூட்டுப்படை போர்வீரர்களுக்கும் British War Graves Commission தற்போது அங்கு இரு சுடுகாடுகளை பராமரித்து வருகின்றது.
மணிப்பூர் ஒரு பதட்டமான எல்லையோர மாநிலமாகக் கருதப்படுகிறது. இந்திய குடிமக்கள் அல்லாதவர்கள் இம்மாநிலத்தினுள் செல்ல தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் உள்ள வட்டார அயல்நாட்டினர் பதிவு அலுவலகத்தில் கட்டுபடுத்தப்பட்ட பகுதிக்கான நுழைவு அனுமதிச் சீட்டு பெற வேண்டும். இந்த சட்டம் மணிப்பூரில் பிறந்து பிற நாடுகளில் குடியேறிய மைத்தி மக்களுக்குங்கூட பொருந்தும். இந்த சிறப்பு அனுமதியைப் பெற்றவர்கள் பத்து நாட்களுக்கு மணிப்பூரில் தங்கலாம். அக்காலகட்டத்தில் அவர்கள் குறைந்தது மூன்று சக பயணிகளுடன் சேர்ந்து அரசாங்க உத்தரவு பெற்ற பயண அதிகாரி ஏற்பாடு செய்த பயண திட்டத்தைப் பின்பற்றிச் செல்ல வேண்டும். அத்துடன், வெளிநாட்டுப் பயணிகள் விமானத்தின் மூலமாய் மட்டுமே இம்பாலினுள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் இம்பால் நகரத்தைத் தவிர வேறு எந்த இடத்திற்கும் செல்ல அனுமதிக்கப் பட மாட்டார்கள்.