பெல்காம் எல்லைப் பிணக்கு
From Wikipedia, the free encyclopedia
பெலகாவி எல்லைப் பிணக்கு அல்லது பெல்காம் எல்லைப் பிணக்கு (Belagavi border dispute or Belgaon border dispute)[1] கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெல்காம் மாவட்டம், கர்நாடகா-மகாராட்டிரம் மாநில எல்லையில் உள்ளது. பெல்காம் மாவட்டத்தில் மராத்தி மொழி பெரும்பான்மை மக்கள் பேசுகின்றனர். 15 ஆகஸ்டு 1947க்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் பம்பாய் மாகாணத்தின் கீழ் பெல்காம் மாவட்டம் இருந்தது.[2]
1956 மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மராத்தி மொழி பெரும்பான்மையாக பேசும் பெல்காம் மாவட்டம், புதிதாக நிறுவப்பட்ட மைசூர் இராச்சியத்துடன் (தற்போது கர்நாடகா) இணைக்கப்பட்டது.[3][4]
மகாராட்டிரா அரசின் கோரிக்கையின் படி, இந்திய அரசு பெல்காம் மாவட்ட உரிமைப் பிணக்கு குறித்து விசாரணை நடத்த 5 சூன் 1960 அன்று நீதியரசர் மகாஜன் தலைமையில் மகாராட்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் சார்பில் நான்கு உறுப்பினர் குழுவை நியமித்தது. இருப்பினும் பெல்காம் மாவட்ட உரிமை/எல்லைப் பிரச்சனை குறித்து ஒப்பந்தம் ஏதும் எட்டப்படவில்லை.[5]கர்நாடகா அரசு தற்போது பெல்காம் மாவட்டம் உள்ளது உள்ளபடி இருக்க வற்புறுத்தியது. மேலும் பெல்காம் பகுதிகள் கர்நாடகத்தின் பகுதி என நிலைநாட்டுவதற்கு கர்நாடக அரசு பெல்காம் நகரத்தில் சுவர்ண சட்டமன்றக் கட்டிடத்தை 11 அக்டோபர் 2012 அன்று நிறுவியது.[6]