புனித இஞ்ஞாசியார் கோவில்
From Wikipedia, the free encyclopedia
புனித லொயோலா இஞ்ஞாசியார் கோவில் என்பது உரோமை நகரில் இயேசு சபை நிறுவுநரான புனித இஞ்ஞாசியாருக்கு (1491-1556)[1] அர்ப்பணிக்கப்பட்ட முதன்மையான கோவில் ஆகும். இதன் முழுப்பெயர் "மார்சியோ வெளி புனித லொயோலா இஞ்ஞாசியார் கோவில்" என்பதாகும். ஆங்கிலத்தில் இக்கோவில் Church of Saint Ignatius of Loyola at Campus Martius என்று அழைக்கப்படுகிறது (இத்தாலியம்: Chiesa di Sant'Ignazio di Loyola a Campo Marzio, இலத்தீன்: S. Ignatii de Loyola in Campo Martio).
மார்சியோ வெளி புனித லொயோலா இஞ்ஞாசியார் கோவில் Church of Saint Ignatius of Loyola at Campus Martius Chiesa di Sant'Ignazio di Loyola a Campo Marzio (இத்தாலியம்) | |
---|---|
இஞ்ஞாசியார் கோவில் முகப்புத் தோற்றம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | உரோமை, இத்தாலியா |
புவியியல் ஆள்கூறுகள் | 41°53′56.4″N 12°28′47.2″E |
சமயம் | கத்தோலிக்க திருச்சபை |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1722 |
நிலை | பங்குக் கோவில்; பட்டம் தொடர்புக் கோவில் |
தலைமை | ரொபேர்ட்டோ தூச்சி |
பரோக் கலைப்பாணியில் அமைந்த இக்கோவில் 1626-1650 ஆண்டுகளில் கட்டப்பட்டது. தொடக்கத்தில் இக்கோவில் அதன் அருகே அமைந்திருந்த உரோமைக் கல்லூரி (Collegio Romano) என்னும் கல்விக்கூடத்துக்குரிய தனிக்கோவிலாக இருந்தது. இட நெருக்கடி முன்னிட்டு உரோமைக் கல்லூரி வசதியான புதியதொரு இடத்துக்கு அகற்றப்பட்டு, பின்னர் கிரகோரி பல்கலைக்கழகமாக உருவெடுத்தது.