![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Ruins_of_old_Kandahar_Citadel_in_1881.jpg/640px-Ruins_of_old_Kandahar_Citadel_in_1881.jpg&w=640&q=50)
பழைய காந்தாரம்
From Wikipedia, the free encyclopedia
பழைய காந்தாரம் (Old Kandahar) (locally known as Zorr Shaar; பஷ்தூ: زوړ ښار, ஆப்கானித்தானில் தென்கிழக்கே அமைந்த கந்தககார் மாகாணத்தின் தலைநகரான தற்கால காந்தாரத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ளது. கிமு 330-இல் இப்பழைய காந்தார நகரத்தை அலெக்சாண்டிரிய அரச்சோசியா எனும் பெயரில் (Alexandria Arachosia) நிறுவியவர் பேரரசர் அலெக்சாந்தர் ஆவார்.[1][2] கடந்த 2,000 ஆண்டுகளாக இப்பழைய காந்தார நகரம் பல இராச்சியங்களின் தலைநகராக இருந்துள்ளது. மேலும் இந்நகரம் மௌரியப் பேரரசு (கிமு 322 –185), இந்தோ சிதியன் பேரரசு (கிமு 200 – கிபி 400), சாசானியப் பேரரசு, ராசிதீன் கலீபாக்கள், சாமனித்து பேரரசு, சபாரித்து வம்சம், கசானவித்து வம்சம், கோரி வம்சம், தைமூர், சபாவித்து வம்சம் மற்றும் பல வம்சத்வர்களின் ஆட்சியில் இருந்துள்ளது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/Old_Kandahar_city.jpg/640px-Old_Kandahar_city.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/ae/Ruins_of_old_Kandahar_Citadel_in_1881.jpg/640px-Ruins_of_old_Kandahar_Citadel_in_1881.jpg)
சிந்துவெளி நாகரிகத்திற்கும் பெரிய ஈரானுக்கும் நடுவில் அமைந்த இப்பழைய காந்தார நகரம் தெற்காசியாவின் மிக முக்கியமான இராணுவ மையமாக விளங்கியது. இந்தியத் துணைக்கண்டத்திற்கும், பண்டைய அண்மை கிழக்கு, பாரசீக வளைகுடா மற்றும் நடு ஆசியாவிற்கும் இடையே முக்கிய வணிகத் தடமாக விளங்கியது.[3]இப்பழைய காந்தார நகரத்தை ஒரு போரின் போது, கிபி 1738-இல் அப்சரித்து வம்சத்தின் பேரரசர் நாதிர் ஷா அழித்தார்.
1750-இல் அகமது ஷா துரானி இப்பழைய நகரத்திற்கு அருகில் தற்போதைய காந்தார நகரத்திற்கு அடிக்கல் நாட்டி, துராணிப் பேரரசின் தலைநகராக மாற்றினார்.[4]
இந்நகரம் வேதகால ஆரியர்களின் குடியிருப்புகளில் ஒன்றாக விளங்கியது. பேரரசர் கனிஷ்கர் ஆடசியின் போது காந்தாரத்தில் பௌத்தம் நன்கு பரவியது.