பரம் வீர் சக்கரம் விருது பெற்றவர்கள்
From Wikipedia, the free encyclopedia
இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான பரம் வீர் சக்கரம், 1999-ஆம் ஆண்டு முடிய 21 இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளது.[1] 14 பேருக்கு இந்த விருது வீரர்கள் இறந்த பிறகு வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 விருதுகள் இந்தியத் தரைப்படை வீரர்களும், ஒர் விருது இந்திய வான்படை வீரரும் பெற்றுள்ளார். இதில் இந்தியத் தரைப் படையின் கிரனேடியர்ஸ் எனும் எறிகணை வீச்சுப் படையினர் 3 விருதுகளும், கூர்க்கா ரைபிள்ஸ் ரெஜிமெண்ட் படையினர் 3 விருதுகளும் பெற்றுள்ளனர். இந்த விருது பெற்றவர்களின் மார்பளவுச் சிற்பங்கள் புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[2]