பதுவை நகர அந்தோனியார்
From Wikipedia, the free encyclopedia
இந்தக் கட்டுரை ஒரு கிறித்தவப் புனிதர் பற்றியது. பிறபயன்பாட்டுக்கு, புனித அந்தோனியார் என்பதைப் பாருங்கள்.
பதுவை நகர அந்தோனியார் (Anthony of Padua) அல்லது லிஸ்பன் நகர அந்தோனியார் (Anthony of Lisbon, 15 ஆகத்து 1195 – 13 சூன் 1231)[1] பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த குரு. இவர் லிஸ்பன் நகரில் பிறந்தாலும் 'பதுவைப்பதியர்' என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம் இத்தாலி நாட்டிலுள்ள பதுவை நகரில்தான் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும் அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் 'பதுவைப் பதியர்' என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் இறந்த சில வருடங்களிலேயே புனிதர் பட்டம் பெற வைத்தது.
விரைவான உண்மைகள் பதுவை நகர புனித அந்தோனியார், மறைவல்லுநர், மறைப்பணியாளர்அவிசுவாசிகளின் சம்மட்டி கோடி அற்புதர் ...
பதுவை நகர புனித அந்தோனியார் | |
---|---|
![]() குழந்தை இயேசுவுடன் பதுவை நகர அந்தோனியார் (ஓவியர்: அந்தோனியோ தே பெரெதா) | |
மறைவல்லுநர், மறைப்பணியாளர் அவிசுவாசிகளின் சம்மட்டி கோடி அற்புதர் | |
பிறப்பு | (1195-08-15)15 ஆகத்து 1195 லிஸ்பன், போர்த்துகல் |
இறப்பு | (1231-06-13)சூன் 13, 1231 (அகவை 36) பதுவை |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
புனிதர் பட்டம் | 30 மே 1232, ஸ்போலேத்தோ, இத்தாலி by ஒன்பதாம் கிரகோரி |
முக்கிய திருத்தலங்கள் | புனித அந்தோனியார் பேராலயம், பதுவை, இத்தாலி |
திருவிழா | 13 ஜூன் |
சித்தரிக்கப்படும் வகை | புத்தகம்; அப்பம்; குழந்தை இயேசு; லீல்லி மலர் |
பாதுகாவல் | அமெரிக்க பழங்குடியினர்; பிரேசில்; முதியோர்; நற்கருணை பக்தி; மீனவர்; அறுவடை; குதிரைகள்; இழந்துபோன பொருட்களைக் கண்டெடுக்கச் செய்கிறவர்; தபால்; மாலுமிகள்; ஒடுக்கப்பட்டோர்; வறியவர்; போர்த்துகல்; கர்ப்பிணிகள்; பசியுறுவோர்; பயணம் செய்வோர்; பரிசல்காரர்; |
மூடு