நரேந்திர குமார்
From Wikipedia, the free encyclopedia
கர்னல் நரேந்திர குமார் (Colonel Narendra Kumar), (பிறப்பு: 8 டிசம்பர் 1933 - 31 டிசம்பர் 2020) ஒரு இந்தியத் தரைப்படை அதிகாரியும் மற்றும் மலையேற்ற வீரரும் ஆவார்.[1][2] அவர் இமயமலை, காரகோரம் மற்றும் பிர் பாஞ்சல் மலைத்தொடர்களில் தனது மலையேற்றங்களுக்குப் பெயர் பெற்றவர்.[3][4]சியாச்சின் பனி மலையில் இவர் மேற்கொண்ட உளவு முயற்சிகளால், 1984ம் ஆண்டில் இந்திய இராணுவம் மேற்கொண்ட மேகதூது நடவடிக்கையால் இந்திய இராணுவம் சியாச்சின் பனிப்பாறையின் முன்னோக்கி நிலைகளை பாகிஸ்தானிடமிருந்து மீட்டெடுத்தது. 1965ல் முதல் இந்திய எவரெஸ்டு மலையேற்றக் குழுவினருக்கு நரேந்திர குமார் துணைத்தலைவராக செயல்பட்டார்.
விரைவான உண்மைகள் வேறு பெயர்(கள்), பட்டப்பெயர்(கள்) ...
கர்னல் நரேந்திர குமார் | |
---|---|
வேறு பெயர்(கள்) | Narinder Sharma, Bull |
பட்டப்பெயர்(கள்) | காளை |
பிறப்பு | (1933-12-08)8 திசம்பர் 1933 இராவல்பிண்டி, பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
இறப்பு | திசம்பர் 31, 2020(2020-12-31) (அகவை 87) தில்லி, இந்தியா |
சார்பு | ![]() |
சேவை/ | இந்தியத் தரைப்படை |
சேவைக்காலம் | 1954–1984 |
தரம் | ![]() |
தொடரிலக்கம் | IC-6729 |
படைப்பிரிவு | குமாவுன் ரெஜிமெண்ட் |
போர்கள்/யுத்தங்கள் | மேகதூது நடவடிக்கை |
விருதுகள் |
மூடு