நசிருதீன் உமாயூன்
இரண்டாவது முகலாயப் பேரரசர் (ஆட்சி. 1530-1540, 1555-1556) / From Wikipedia, the free encyclopedia
நசிருதீன் முகம்மது (Nasir-ud-Din Muḥammad, பாரசீக மொழி: ناصرالدین محمد) (மார்ச் 6, 1508 - பெப்ரவரி 22, 1556) என்பவர் இரண்டாவது முகலாயப் பேரரசர் ஆவார். இவர் இன்றைய கிழக்கு ஆப்கானித்தான், பாக்கித்தான், வட இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய பகுதிகளை 1530-1540 வரையும், பின் மீண்டும் 1555-1556 வரையும் ஆண்டார். இவரது தந்தை பாபுர். இவருக்கு அடுத்து இவரது மகன் அக்பர் ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை பாபுரைப் போலவே இவரும் தனது இராச்சியத்தை ஆரம்பத்தில் இழந்தார். பிறகு பாரசீகத்தின் சபாவித்து அரச மரபின் உதவியுடன் அதனை திரும்பப் பெற்றார். 1556இல் உமாயூனின் இறப்பின் போது முகலாயப் பேரரசானது கிட்டத்தட்ட 10 இலட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரவியிருந்தது.
நசிருதீன் முகம்மது உமாயூன் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
அல் சுல்தான் அல் ஆசம் [1] | |||||||||
![]() உமாயூனின் ஓவியம் | |||||||||
முகலாயப் பேரரசின் 2வது பேரரசர் | |||||||||
முதல் ஆட்சி | 26 திசம்பர் 1530 – 17 மே 1540 | ||||||||
முடிசூட்டுதல் | 29 திசம்பர் 1530, ஆக்ரா | ||||||||
முன்னையவர் | பாபுர் | ||||||||
பின்னையவர் | சேர் சா சூரி (சூர் அரசமரபு) | ||||||||
வாரிசு | அல் அமன் மிர்சா | ||||||||
இரண்டாம் ஆட்சி | 22 சூன் 1555 – 27 சனவரி 1556 | ||||||||
முன்னையவர் | அடில் ஷா சூரி | ||||||||
பின்னையவர் | அக்பர் | ||||||||
பிறப்பு | நசிருதீன் முகம்மது [2] 6 மார்ச் 1508 காபூல் (தற்கால ஆப்கானித்தான்) | ||||||||
இறப்பு | 27 சனவரி 1556(1556-01-27) (அகவை 47) தில்லி, முகலாயப் பேரரசு (தற்கால இந்தியா) | ||||||||
புதைத்த இடம் | |||||||||
பட்டத்து இராணி |
| ||||||||
மனைவிகள் | |||||||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||||||
| |||||||||
மரபு | பாபுர் குடும்பம் | ||||||||
அரசமரபு | தைமூர் குடும்பம் | ||||||||
தந்தை | பாபுர் | ||||||||
தாய் | மகம் பேகம் | ||||||||
மதம் | சன்னி இசுலாம் |
திசம்பர் 1530இல் தனது தந்தைக்குப் பிறகு உமாயூன் இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்த முகலாயப் பகுதிகளுக்கு ஆட்சியாளராக தில்லி அரியணைக்கு வந்தார். ஆட்சிக்கு வந்த போது உமாயூன் ஓர் அனுபவமற்ற ஆட்சியாளராக இருந்தார். அப்போது இவருக்கு வயது 22 ஆகும். இவரது ஒன்று விட்ட சகோதரரான கம்ரான் மிர்சா தங்களது தந்தையின் பேரரசின் வடக்குக் கோடிப் பகுதிகளான காபூல் மற்றும் காந்தாரம் ஆகியவற்றைப் பெற்றிருந்தார். இந்த இரு ஒன்று விட்ட சகோதரர்களும் கசப்புணர்வு கொண்ட எதிரிகளாக உருவாயினர்.
உமாயூன் முகலாயப் பகுதிகளை சேர் சா சூரியிடம் இழந்தார். ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சபாவித்து அரச மரபின் உதவியுடன் அதனைத் திரும்பப் பெற்றார். பாரசீகத்தில் இருந்து திரும்பிய உமாயூன் தன்னுடன் ஒரு பெரிய பாரசீக உயர்குடியினரின் பரிவாரத்துடன் வந்தார். முகலாய அவைக் கலாச்சாரத்தில் ஏற்படப்போகும் ஒரு முக்கியமான மாற்றத்தை இந்த சமிக்ஞை காட்டியது. முகலாய அரசமரபின் நடு ஆசியப் பூர்வீகமானது பாரசீகக் கலை, கட்டடக்கலை, மொழி மற்றும் இலக்கிய தாக்கத்தால் பெருமளவு மாறியது. உமாயூனின் காலத்திலிருந்து பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பாரசீகக் கையெழுத்துப் பிரதிகள் இந்தியாவில் கிடைக்கப் பெறுகின்றன.
இறுதியாக உமாயூன் ஒரு மிகக் குறுகிய காலத்திலேயே தனது பேரரசை விரிவாக்கினார். இதன் மூலம் தனது மகன் அக்பருக்கு ஒரு பெரும் மரபை விட்டு சென்றார்.
1535இல் உமாயூன் குசராத்தின் ஆளுநராக இருந்த போது காம்பேவுக்கு (காம்பத்) அருகில் முகாமிட்டிருந்தார்.குசராத்தின் கோலிகளால் உமாயூனும், இவரது இராணுவமும் கொள்ளையடிக்கப்பட்டுச் சூறையாடப்பட்டது.[6][7][8][9]