முகலாய வம்சம்
From Wikipedia, the free encyclopedia
முகலாய வம்சம் (Mughal dynasty ) என்பது பாபரின் குர்கானியர்கள் எனப்படும் ஏகாதிபத்திய சபையின் உறுப்பினர்களால் ஆனது. முகலாயர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்த துருக்கிய-மங்கோலிய வம்சாவளியைச் சேர்ந்த தைமூர் வம்சத்தின் ஒரு கிளையாக இருந்தனர். வம்சத்தின் நிறுவனர், பாபர் தனது தந்தை வழியில் ஆசிய வெற்றியாளரான தைமூரையும், தாய் வழியில் மங்கோலிய பேரரசர் செங்கிஸ் கான் ஆகிய இருவரின் நேரடி வம்சாவளியாக இருந்தார். அதே போல் பாபரின் மூதாதையர்களும் திருமணங்கள் மற்றும் பொதுவான வம்சாவளியின் மூலம் செங்கிசிட்களுடன் தொடர்பு கொண்டிருந்தனர். "முகலாயம்" என்ற சொல் அரபு மற்றும் பாரசீக மொழிகளில் " மங்கோலியம் " என்பதின் சிதைந்த வடிவமாகும். ஏனெனில் இது முகலாய வம்சத்தின் மங்கோலிய தோற்றத்தை வலியுறுத்தியது. முகலாய வம்சம் முகலாயப் பேரரசை கி.பி. 1526 முதல் 1857 வரை ஆட்சி செய்தது.
பாபரின் சபை | |
---|---|
நாடு | முகலாயப் பேரரசு |
தாயில்லம் | தைமூர் வம்சம் |
விருதுப் பெயர்கள் | பட்டியல்
|
நிறுவிய ஆண்டு | ஏறக்குறைய. 1526 |
நிறுவனர் | பாபர் |
இறுதி ஆட்சியர் | பகதூர் சா சஃபார் |
முடிவுற்ற ஆண்டு | 27 செப்டம்பர் 1857 |
பேரரசின் வரலாற்றின் பெரும்பகுதியின்போது, பேரரசர் முழுமையான ஆட்சியாளார், நாட்டுத் தலைவர், அரசாங்கத் தலைவர் மற்றும் இராணுவத் தலைவராக இருந்தார். அதே நேரத்தில் வீழ்ச்சியடைந்த காலத்தில் பிரதம அமைச்சருக்கு அதிகாரம் மாற்றப்பட்டது . பேரரசு பல பிராந்திய இராச்சியங்களாகவும், சுதேச மாநிலங்களாகவும் பிரிக்கப்பட்டது. [1] ஆனால் வீழ்ச்சியடைந்த சகாப்தத்தில் கூட, முகலாயப் பேரரசர், இந்திய துணைக் கண்டத்தின் மீது இறையாண்மையின் மிக உயர்ந்த வெளிப்பாடாகத் தொடர்ந்தார். முஸ்லிம் முகவராக மட்டுமல்ல, மராட்டிய, இராஜபுதன மற்றும் சீக்கியத் தலைவர்களும் தெற்காசியாவின் இறையாண்மை கொண்ட பேரரசரின் சடங்கு ஒப்புதல்களில் பங்கேற்றனர். [2] ஏகாதிபத்திய குடும்பம் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டது. மேலும், 1857 செப்டம்பர் 27 அன்று முதல் இந்திய சுதந்திரப் போரின்போது பேரரசு ஒழிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு பிரிட்டிசு இராச்சியம் அறிவிக்கப்பட்டது.
கடைசி பேரரசர் இரண்டாம் பகதூர் சா பிரிட்டிசாரின் கட்டுப்பாட்டில் உள்ள பர்மாவிலுள்ள (இப்போது மியான்மர்) யங்கோனுக்கு நாடுகடத்தப்பட்டார். பல குற்றச்சாட்டுகளில் அவரை தண்டித்த பின்னர். [3] பாக்கித்தான், இந்தியா மற்றும் வங்காளதேசத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை முகலாய வம்சத்தின் சந்ததியினர் என்று கூறிக்கொண்டது.