தேவசகாயம் பிள்ளை
இந்திய கத்தோலிக்கப் புனிதர் / From Wikipedia, the free encyclopedia
புனிதர் தேவசகாயம் (Saint Devasahayam, 23 ஏப்ரல் 1712 – 14 சனவரி 1752) இந்தியக் கத்தோலிக்கப் புனிதர் ஆவார். இவர் கன்னியாகுமரியில் இந்துக் குடும்பம் ஒன்றில் 18-ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். நீலகண்டன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திருமுழுக்குப் பெற்றபோது, "லாசரசு" (Lazarus) என்பதன் தமிழ் பதமான "தேவசகாயம்" என்ற பெயரைப் பெற்றார். உயர் வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கிறித்தவத்தை தழுவக்கூடாது என்ற அன்றைய திருவாங்கூர் மன்னரின் கட்டளையை மீறி மதம் மாறியதால் இவர் கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது.[2] தேவசகாயம் இறந்த இடம் இன்று தேவசகாயம் மவுண்ட் என்றும், ஆரல் குருசடி என்றும் அழைக்கப்படுகிறது. கத்தோலிக்கத் திருச்சபை 2012 திசம்பரில் இவருக்கு அருளாளர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.[3][4] திருத்தந்தை பிரான்சிசு தேவசகாயத்தை 2022 மே 15 அன்று ஒரு புனிதராக அறிவித்தார்.
தேவசகாயம் | |
---|---|
கோட்டாறு, புனித சவேரியார் பேராலயத்தில் உள்ள தேவசகாயம் திருவுருவம் | |
மறைசாட்சி, பொதுநிலையினர் | |
பிறப்பு | நீலகண்டன் (1712-04-23)23 ஏப்ரல் 1712 நட்டாலம், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கூர் |
இறப்பு | 14 சனவரி 1752(1752-01-14) (அகவை 39) ஆரல்வாய்மொழி, திருவிதாங்கூர் |
கல்லறை | கோட்டாறு, நாகர்கோவில், இந்தியா |
ஏற்கும் சபை/சமயங்கள் | கத்தோலிக்க திருச்சபை |
அருளாளர் பட்டம் | 2 திசம்பர் 2012, புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு by கர்தினால் ஆஞ்செலோ அமாத்தோ (திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்டின் பதிலாள்) |
புனிதர் பட்டம் | 15 மே 2022, புனித பேதுரு சதுக்கம், வத்திக்கான் நகர் by திருத்தந்தை பிரான்சிசு |
முக்கிய திருத்தலங்கள் | புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு |
திருவிழா | சனவரி 14[1] |
சித்தரிக்கப்படும் வகை | சங்கிலியால் பிணைக்கப்பட்டவாறு மரணதண்டனைக்கு முன் முழங்கால்களில் இறைவேண்டல் செய்வது போல |
பாதுகாவல் | இந்தியா துன்புறுத்தப்படும் கிறித்தவர்கள் |