![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/28/AQMI_Flag_asymmetric.svg/langta-640px-AQMI_Flag_asymmetric.svg.png&w=640&q=50)
தேசிய தவ்கீத் ஜமாத்
இலங்கையைச் சேர்ந்த அடிப்படைவாத இசுலாமியக் குழு / From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
தேசிய தவ்கீத் ஜமாத் (National Thowheeth Jama'ath NTJ; அரபு மொழி: جماعة التوحيد الوطنية, "தேசிய ஓரிறைவாத அமைப்பு") என்பது இலங்கையைச் சேர்ந்த ஒரு அடிப்படைவாத, இசுலாமிய ஜிகாதியக் குழுவாகும். இக்குழுவே இலங்கையில் 2019 ஏப்ரல் 21 அன்று உயிர்ப்பு ஞாயிறுத் தற்கொலைக் குண்டுவெடிப்புகளை நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.[10][11] இவ்வமைப்பு இசுலாமிய அரசுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக நம்பப்படுகிறது.[12] இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வியக்கத்தை 2019 ஏப்ரல் 27 இல் தடை செய்து, அதனை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்தார்.[13]
விரைவான உண்மைகள் தேசிய தவ்ஹீத் ஜமா'அத் National Thowheeth Jama'ath, வேறு பெயர் ...
தேசிய தவ்ஹீத் ஜமா'அத் National Thowheeth Jama'ath | |
---|---|
![]() தேசிய தவ்ஹீத் ஜமா'அத்தின் சின்னம், (இசுலாமிய அரசின் சின்னத்தை ஒத்தது[1] | |
வேறு பெயர் |
|
தலைவர்(கள்) | முகம்மது காசிம் முகம்மது சஹ்ரான் †[2] |
செயல்பாட்டுக் காலம் | அண். 2016 (அண். 2016) – மே 7, 2019 (2019-05-07) |
நோக்கங்கள் | இலங்கையை ஓர் இசுலாமியக் கலீபகமாக்குதல் |
செயல்பாட்டுப் பகுதி(கள்) | இலங்கை |
சித்தாந்தம் | வகாபிசம், சலாபி ஜிகாதிசம், இசுலாமியத் தீவிரவாதம் |
பெரும் செயல்கள் | தற்கொலைத் தாக்குதல், வாகனக் குண்டுகள், காலித்தனம்,[3][4][5] சமய வன்முறை[4][5][6] |
குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் | வவுணதீவில் காவல்துறை அதிகாரிகள் கொலை, 2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள், ஏப்ரல் 2019 கல்முனைத் தாக்குதல், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமை[4][5] |
நிலை | செயலிழப்பு, முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டோ, கைது செய்யப்பட்டோ உள்ளனர். இலங்கையில் இதன் தொடர்பூடகங்கள் செயலிழக்கப்பட்டன, $40 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல், பன்னாட்டுத் தொடர்புகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன.[7][8] |
அளவு | 100–150 உறுப்பினர்கள்[9] |
மூடு