ஜிகாத்
From Wikipedia, the free encyclopedia
ஜிகாத் (அரபு மொழி: جهاد, ஜிஹாது) எனும் அரபு மொழிச் சொல்லுக்கு முயற்சித்தல், கடுமையாக உழைத்தல், போராடுதல், தற்காப்பு போன்ற பல்வேறு பொருள்கள் உண்டு[1][2]. ஜிஹாதை மேற்கொள்ளுபவர் முஜாஹித் என அழைக்கப்படுகிறார். முஜாஹிதீன் என்பது இதற்கான பன்மை சொல்லாகும்[3]. ஜிஹாத் தொடர்பான பல வசனங்கள் குர்ஆனில் காணப்படுகின்றன.[4][5] இது கடவுளின் வழியில் உழைத்தல், முயற்சித்தல் மற்றும் போராடுதலை குறிக்கும் (striving in the way of God (al-jihad fi sabil Allah).[6][7][8].
இக் கட்டுரையின் நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. |
முஸ்லிம்[9] மற்றும் முஸ்லிமல்லாத [10] அறிஞர்கள் பலர், ஜிஹாத் எனும் சொல்லுக்கு இரண்டு விதமான பொருளை தருகின்றனர். (மன இச்சைகளுக்கு எதிரான) "உள்ளக ஆன்மீக போராட்டம்" (inner spiritual struggle) ஒரு பொருளாகவும் [11], இஸ்லாமிய எதிரிகளுடனான உடல்ரீதியான போராட்டம் (outer physical struggle) மற்றொரு பொருளாகவும் கையாளப்படுகின்றது.[12] அகிம்சை போராட்டம் மற்றும் வன்முறை போராட்டம் ஆகிய இரண்டும் இரண்டாவது பொருளில் சேரும்.[6][13][14]
இது புனிதப்போர் ("Holy War")[15][16][17] எனவும் பரவலாக மொழிப்பெயர்க்கப்படுகின்றது. இது சர்ச்சைக்குரிய மொழிப்பெயர்ப்பாகும். பெரும்பான்மையான இஸ்லாமியர்களும், அறிஞர்களும் 'புனித போர்' என்ற மொழியாக்கத்தை ஏற்பதில்லை. [18][19] மொழியியலாளரான பெர்னார்டு லீவிஸ் (Bernard Lewis) ஜிஹாத் என்பது ஆயுதப் போராட்டம் என்ற பொருளிலேயே பலராலும் புரிந்துகொள்ளப்படுவதாக குறிப்பிடுகிறார்.[20] ஜாவித் அஹமத் கமிதி (Javed Ahmad Ghamidi) ஜிஹாதானது தவறாக செயல்படுபவர்களுக்கு எதிராக எடுக்கப்படும் ஆயுத நடவடிக்கையையும் உள்ளடக்கியது என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் கருத்தொற்றுமை கொண்டுள்ளதாக குறிப்பிடுகின்றார்.[21]
சுன்னி இசுலாமில் அதிகாரபட்சமாக இடமில்லாத போதும் சில வேளைகளில் ஜிகாத் இசுலாமின் ஆறாவது தூணாகவும் அழைக்கப்படுவதுண்டு.[22] சியா இசுலாமில் ஜிஹாத் 10 முக்கிய கடமைகளில் ஒன்றாகும். பொதுவாக, ஜிஹாதின் ஒரு பகுதியான ஆயுத போராட்டம் கலீபாக்களால் தான் அறிவிக்கப்பட வேண்டும், ஆனால் இஸ்லாமியர்கள் கலீபாக்களின் மத அதிகாரத்தை (spiritual authority) ஏற்றுக்கொள்வதில்லை. மேலும் 1923 ஆம் ஆண்டிற்குப் பின்னர் கலீபாக்கள் இடம் வெற்றிடமாகவே உள்ளது. சுன்னி இசுலாமைச் சாராதவர்கள் ஆயுத போராட்டத்திற்கு தமது ஆட்சியாளர்கள் அறைகூவல் விடுத்தால் போதும் என எண்ணுகின்றனர்.