தெகுரான்
ஈரானின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
தெஹரான் ஈரான் நாட்டின் தலைநகரமும் தெகுரான் மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். 9 மில்லியன் மக்கள் நகரத்திலும் 16 மக்கள் தெகுரான் பெரு நகர வட்டாரத்திலும் வசிக்கிறார்கள். கராச் நகர மக்கள் தொகை இதில் அடங்காது. ஈரானின் மக்கள் தொகை மிகுந்த நகரம் இதுவாகும். மேற்கு ஆசியாவிலுள்ள மக்கள் தொகை மிகுந்த இரண்டாவது நகரமும் மத்திய கிழக்கிலுள்ள மூன்றாவது பெரிய பெரு நகர வட்டாரமும் இதுவாகும். உலக அளவில் 29வது பெரிய பெரு நகர வட்டாரம் இதுவாகும்.[1]
தெஹ்ரான்
تهران | |
---|---|
அடைபெயர்(கள்): 72 நாடுகளின் நகரம். | |
ஈரானில் தெஹ்ரான் இருப்பிடம் | |
நாடு | ஈரான் |
மாகாணம் | தெஹ்ரான் |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | முகமது பகெர் கலிபஃப் |
பரப்பளவு | |
• நகரம் | 686 km2 (265 sq mi) |
• மாநகரம் | 18,814 km2 (7,264 sq mi) |
ஏற்றம் | 1,200 m (3,900 ft) |
மக்கள்தொகை (2006) | |
• நகரம் | 1,10,00,000 |
• அடர்த்தி | 11,360.9/km2 (29,424.6/sq mi) |
• நகர்ப்புறம் | 77,05,036 |
• பெருநகர் | 1,34,13,348 |
நேர வலயம் | ஒசநே+3:30 (IRST) |
• கோடை (பசேநே) | ஒசநே+3:30 (பயன்படுத்தவில்லை) |
இணையதளம் | http://www.tehran.ir |
பழங்காலத்தில் சௌராசுட்டிர மதத்தவர்களின் நகரின் ஒரு பகுதியாக தற்போதைய தெகுரானின் பகுதி விளங்கியது.[2] 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் அந்நகரம் அழிக்கப்பட்டது. அந்நகரின் எச்சம் தெகுரான் மாகாணத்தில் தற்போதைய தெகுரானின் தென்புற முடிவில் உள்ளது
ஈரானின் காக்கேசியா அருகில் உள்ள பகுதிகளை எளிதில் அடைவதற்காக 1796ஆம் ஆண்டு குசார் அரசமரபு வழிவந்த ஆகா முகமது கான் தெகுரானை முதன் முதல் ஈரானின் தலைநகர் ஆக்கினார். உருசிய-பெர்சிய போர் காரணமாகவும் முன்னால் ஈரானை ஆண்ட அரசமரபுகளின் எதிர்ப்பை சமாளிக்கவும் காக்கேசியா ஈரானிடம் இருந்து பிரிந்தது. பல முறை ஈரானின் தலைநகர் மாறியுள்ளது. 32வது முறை நாட்டின் தலைநகராக தெகுரான் ஆகியுள்ளது,
ஈரானின் கடைசி இரு அரசமரபுக்களான குசார், பாலவிசு ஆகியவற்றின் தலைநகராக தெகுரான் இருந்துள்ளது. சாடாபாத் வளாகம், நியவரன் வளாகம், கோல்சுடன் வளாகம் ஆகிய அரசு வளாகங்கள் இங்கு உள்ளன.
பெருமளவிலான மக்கள் ஈரானின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தெகுரானுக்கு குடியேறியதை தொடர்ந்து 1920ஆம் ஆண்டு இங்கு பெரிய அளவில் கட்டடங்கள் இடிக்கப்பட்டன, பல புதிதாக கட்டப்பட்டன.[3]
தெகுரானின் புகழ் பெற்ற கட்டடங்கள் பாலவி காலத்தில் கட்டப்பட்ட ஆசாதி கோபுரம், 2007இல் கட்டப்பட்ட உலகின் 17வது உயர்ந்த கட்டடமான மிலாட் கோபுரம், 2014ஆம் ஆண்டு கட்டப்பட்ட டாபியட் பாலம் ஆகியவை ஆகும்[4]
தெகுரானின் பெரும்பாலான மக்கள் பாரசீக மொழி பேசுபவர்கள்,[5][6] 99% மக்கள் பாரசீக மொழியை பேசுபவர்களாகவோ புரிந்து கொள்பவர்களாகவோ உள்ளார்கள். அசர்பைசானியர்கள், அருமேனியர்கள், குர்துகள் என பல இனக்குழுக்கள் பாரசீக மொழியை இரண்டாம் மொழியாக பேசுகிறார்கள்.[7]