![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8a/Tiruvannamalai_Montage.jpg/640px-Tiruvannamalai_Montage.jpg&w=640&q=50)
திருவண்ணாமலை
தமிழ்நாட்டின் 11வது பெரிய மாநகரம். உலகப் புகழ்ப்பெற்ற திருக்கோயில் திருத்தலம். / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை நகரம் பற்றியது, இதே பெயரில் உள்ள மாவட்டம் பற்றி அறிய திருவண்ணாமலை மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.
திருவண்ணாமலை (Tiruvannamalai) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். திருவண்ணாமலை மாவட்டத்தின் தலைநகரும் இதுவே ஆகும். இந்நகருக்கு, திருவருணை மற்றும் திருஅண்ணாமலை எனும் பெயர்களும் உண்டு. புனித நகரமாகக் கருதப்படும் இந்நகரில், புகழ்பெற்ற (நினைத்தாலே முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றான) அண்ணாமலையார் திருக்கோயில் உள்ளது.
விரைவான உண்மைகள் திருவண்ணாமலை Tiruvannamalaiதிருவருனை, திருஅண்ணாமலை, நாடு ...
திருவண்ணாமலை
Tiruvannamalai திருவருனை, திருஅண்ணாமலை | |
---|---|
மாநகராட்சி | |
![]() | |
அடைபெயர்(கள்): கோயில் மாநகரம், தக்காணப் பீடபூமியின் நுழைவாயில் | |
ஆள்கூறுகள்: 12.22°N 79.07°E / 12.22; 79.07 | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவண்ணாமலை |
பகுதி | தொண்டை நாடு |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | திருவண்ணாமலை மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | சி. என். அண்ணாத்துரை |
• சட்டமன்ற உறுப்பினர் | எ. வா. வேலு |
• மாவட்ட ஆட்சியர் | பி. முருகேஷ், இ. ஆ. ப |
பரப்பளவு | |
• மாநகராட்சி | 13.64 km2 (5.27 sq mi) |
ஏற்றம் | 171 m (561 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மாநகராட்சி | 1,45,278 |
• தரவரிசை | 25 |
• பெருநகர் | 1,98,100 |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீடு | 606601 |
தொலைபேசி குறியீடு | 91-4175 |
வாகனப் பதிவு | TN 25 |
சென்னையிலிருந்து தொலைவு | 194 கி.மீ (121 மைல்) |
பெங்களூரிலிருந்து தொலைவு | 202 கி.மீ (126 மைல்) |
புதுச்சேரியிலிருந்து தொலைவு | 106 கி.மீ (66 மைல்) |
இணையதளம் | tiruvannamalai |
மூடு
இந்நகரம், புதுச்சேரி - திருவண்ணாமலை - பெங்களூரு நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 66ம், வேலூர் - திருவண்ணாமலை - விழுப்புரம் - திருச்சி - தூத்துக்குடி நகரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 38 ம் மற்றும் திருவண்ணாமலை - ஆரணி - சென்னை நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 237 ம், இணைக்கும் இடத்தில் அமைந்துள்ளது.